24 662216bdf1336
உலகம்செய்திகள்

இஸ்ரேலிலுள்ள அமெரிக்க அதிகாரிகளுக்கு தடை

Share

இஸ்ரேலிலுள்ள அமெரிக்க அதிகாரிகளுக்கு தடை

ஈரான்(iran) மீதான இஸ்ரேலின்(israel) பதிலடித் தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேலில் உள்ள தனது தூதரகப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கான பயணத்தை அமெரிக்கா தடை செய்துள்ளது.

அதன்படி டெல் அவிவ் (Tel Aviv) பிராந்தியத்தின் ஹெர்ஸ்லியா (Herzliya), நெதன்யா (Netanya), எவன் யெஹுதா (Even Yehuda) ஜெருசலேம் (Jerusalem) மற்றும் பீர் ஷெவா (Be’er Sheva) பகுதிகளுக்கு வெளியே அடுத்த அறிவிப்பு வரும் வரை பயணிக்க வேண்டாம் என்று ஊழியர்களுக்குக் கூறப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

தற்போது இஸ்ரேல் ஈரான் மோதலினால் இஸ்ரேலில் பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலவுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, இஸ்ரேலை விட்டு வெளியேறுமாறு அவுஸ்திரேலியா தனது குடிமக்களை வலியுறுத்தியுள்ளது.

பயங்கரவாத தாக்குதல்களின் அதிக அச்சுறுத்தல் பிராந்தியம் முழுவதும் உள்ளது எனவும் பாதுகாப்பு நிலைமை விரைவாக மோசமடையக்கூடும், ”என்று அவுஸ்திரேலிய வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறை அறிவித்துள்ளது.

இதேவேளை விமான சேவைகள் ரத்து செய்தல் மற்றும் பிற பயண இடையூறுகள் குறித்தும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு இஸ்ரேலிலிருக்கும் அவுஸ்திரேலியர்களுக்கு அந்நாட்டு எச்சரித்துள்ளது.

Share
தொடர்புடையது
10 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள் நியாயமானவை: அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் பிரையன் மாஸ்ட் உறுதி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில், மத்திய கிழக்கில் ஈரான் ஆதரவு குழுக்களை இலக்கு வைத்து அமெரிக்கா...

09 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மதுபோதையில் இருப்பவர்களால் பெண்களுக்கு அச்சுறுத்தல்: 71% பெண்கள் பொது இடங்களில் பாதுகாப்பற்ற உணர்வு!

மது அருந்தியவர்களினால் பொது இடங்களில் தமக்கு பாதுகாப்பு இல்லை என இலங்கையில் 71 வீதமான பெண்கள்...

08 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எப்போது? பரீட்சை ஆணையாளர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம்...

07 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

50,000 ரூபாய் லஞ்ச விவகாரம்: தெஹியத்தகண்டிய கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட இருவர் பிணையில் விடுதலை!

பணியில் மீண்டும் இணைந்த ஒருவரின் நியமனக் காலத்தை நீடிப்பதற்காக 50,000 ரூபாயை லஞ்சமாகப் பெற்ற வழக்கில்,...