24 661f564e0f6a5
உலகம்செய்திகள்

2 நாடுகள் தொடர்பில் பிரித்தானியா பயண எச்சரிக்கை

Share

2 நாடுகள் தொடர்பில் பிரித்தானியா பயண எச்சரிக்கை

பிரித்தானிய சுற்றுலாப்பயணிகளுக்கு இரண்டு நாடுகள் தொடர்பில் வெளியுறவு அலுவலகம் பயண எச்சரிக்கை விடுத்துள்ளது.

எகிப்து மற்றும் மொராக்கோ ஆகிய நாடுகளுக்கு சுற்றுலா செல்வது தொடர்பில் பிரித்தானியர்களுக்கு பயண எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது பிரித்தானிய வெளியுறவு அலுவலகம்.

சமீப காலமாக எகிப்து மற்றும் மொராக்கோ ஆகிய நாடுகள் பிரித்தானியர்களின் விருப்ப சுற்றுலாத்தலங்களாகியுள்ளன. ஆனால், இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இந்த இரண்டு நாடுகளுக்கும் செல்வது தொடர்பில் பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எகிப்து, இஸ்ரேல் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. அத்துடன், பிரித்தானியர்களை குறிவைத்து தீவிரவாத தாக்குதல்கள் நடந்துவரும் நிலையில், கடத்தப்படும் அபாயமும் உள்ளது. ஆகவே, எகிப்துக்கு சுற்றுலா செல்வது ஆபத்தானது என்றும் சுற்றுலா செல்வோர் மிகவும் எச்சரிக்கையாக நடந்துகொள்ளவேண்டுமென்றும் பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.

மொராக்கோவைப் பொருத்தவரை, தீவிரவாதிகள் மொராக்கோ மீது தாக்குதல் நடத்தக்கூடும். மொராக்கோவில் வாழ்வோரிடையே ஐ எஸ் அமைப்புக்கு ஆதரவு அதிகரித்துவருகிறது. ஆகவே, பிரித்தானியர்கள் கடத்தப்படும் அபாயம் உள்ளது.

சமீபத்திய இஸ்ரேல் ஈரான் தாக்குதல்களின்போது எகிப்து மீதோ, மொராக்கோ மீதோ தாக்குதல்கள் நடத்தப்படவில்லை. என்றாலும், சூழல் வேகமாக மாறிவருகிறது. ஆகவே, ஆக, இந்த இரண்டு நாடுகளுக்கும் சுற்றுலா செல்வோர் கவனமாக செயல்படவேண்டும் என பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் பிரித்தானியர்களை அறிவுறுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
world 108
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொழிலதிபர்களுக்கு விசேட எரிபொருள் ஒதுக்கீடு: அரசாங்கத்தின் புதிய திட்டம் குறித்து அறிவிப்பு!

இலங்கையிலுள்ள பெரிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிலதிபர்களின் கோரிக்கையை ஏற்று, அவர்களின் செயல்பாடுகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்காக...

world 107
செய்திகள்உலகம்

ஈரான் பேச்சுவார்த்தை முறிவு: கவலையின்றி UFC சண்டையைக் கண்டுகளித்த டொனால்ட் டிரம்ப்!

மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்துவதற்காக ஈரானுடன் இஸ்லாமாபாத்தில் நடத்தப்பட்ட மிக முக்கியமான அமைதிப் பேச்சுவார்த்தைகள் எவ்வித...

world 106
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பூசா சிறையிலிருந்து வெலிசராவுக்கு மாற்றப்பட்ட 7 முக்கிய பாதாள உலகக் கும்பல் தலைவர்கள்!

இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களைச் சேர்ந்த ஏழு முக்கிய தலைவர்கள், பூசா உயர் பாதுகாப்புச் சிறையிலிருந்து...

world 101
உலகம்செய்திகள்

அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை முறிவு: போர் நிறுத்தத்தைத் தொடர ஆஸ்திரேலியா வலியுறுத்தல்!

இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகள் எவ்வித உடன்பாடும் இன்றி முடிவடைந்ததைத்...