24 661e42530b397
உலகம்செய்திகள்

கனடாவில் வீடுகள் தட்டுப்பாட்டுக்கு புலம்பெயர்தல்தான் காரணமா?

Share

கனடாவில் வீடுகள் தட்டுப்பாட்டுக்கு புலம்பெயர்தல்தான் காரணமா?

கனடாவில் வீடுகள் தட்டுப்பாட்டுக்கு புலம்பெயர்தல்தான் காரணம் என்பது போன்ற ஒரு தோற்றம் சமீப காலமாக உருவாக்கப்பட்டு வருவதை நாம் கவனித்துவருகிறோம்.

ஆக, புலம்பெயர்தல் கொள்கைகளை மறுசீரமைத்துவிட்டால் வீடுகள் தட்டுப்பாடு குறைந்துவிடுமா?

உண்மையாகவே, கனடாவில் வீடுகள் தட்டுப்பாட்டுக்கு புலம்பெயர்தல்தான் காரணமா? இந்தக் கேள்விகளுக்கு வெளிப்படையாக பதிலளிக்கும் பேராசிரியர் Paul Kershaw, வீடு தட்டுப்பாடு பிரச்சினையின் பின்னால் ஒரு மோசமான ரகசியம் உள்ளது என்கிறார்.

2005ஆம் ஆண்டு, ஜனவரி மாத நிலவரப்படி, சராசரியாக வீடொன்றின் விலை 241,000 டொலர்களாக இருந்தது. அதுவே, 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மூன்று மடங்கைவிட அதிகரித்து, பின் சற்று குறைந்து, 2024 பிப்ரவரியில் 719,400 டொலர்களாக ஆகியுள்ளது.

இந்த ஆண்டின் நான்காம் காலாண்டில், வீடுகள் விலை மேலும் 9 சதவிகிதம் அதிகரிக்கக்கூடும் என சம்பந்தப்பட்ட துறை கணித்துள்ளது.

தற்போதைய சூழலில், அனைவருக்கும் வாழ்வதற்கு வீடு கிடைக்கவேண்டும் என்பதைவிட, ரியல் எஸ்டேட் துறையில் எப்படி லாபம் பார்க்கலாம் என்ற மன நிலைமைதான் காணப்படுகிறது என்கிறார், Paul Kershaw.

அதாவது, தங்களுக்கு வாழ ஒரு வீடு தேவை என்பதற்காக வீடு வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைந்து, வீடு வாங்கி விற்பதை தொழிலாக கொண்டுள்ளவர்கள்தான் அதிகம் வீடுகளை வாங்குவதாக கனடா வங்கி தெரிவித்துள்ளது.

வீடுகளை வாக்கிவைத்துக்கொண்டு அதை விற்பதன் மூலம் லாபம் பார்ப்பவர்கள், வீடுகள் விலை அதிகமாகவேண்டும் என்றுதானே எதிர்பார்ப்பார்கள்?

அரசியல்வாதிகள் சொல்வதைப்போல, அவர்களால் ஒருபோதும் வீடுகள் விலையை குறைக்கமுடியாது. இந்த வீடு வாங்கி விற்றல் விடயத்தால், சட்டத்தரணிகள், கட்டுமானப் பணி செய்வோர் என பல துறையினருக்கு லாபம் உள்ளது. அத்துடன், அதனால் நாட்டின் பொருளாதாரத்துக்கும் பயன் உள்ளது.

ஆக, வீடுகள் விலை உயரவேண்டும், அதை விற்று லாபம் பார்க்கவேண்டும் என்ற மன நிலைமையில் செயல்படுவோர் உள்ளவரை வீடுகள் பிரச்சினையைத் தீர்க்கமுடியாது என்கிறார்கள் துறைசார் பிரச்சினைகளை நன்கறிந்தவர்கள்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...