24 661e40dd05263
இலங்கைசெய்திகள்

இலங்கையைப் பாராட்டிய சர்வதேச நாணய நிதியம்

Share

இலங்கையைப் பாராட்டிய சர்வதேச நாணய நிதியம்

பொருளாதார நெருக்கடியில் இருந்து, மீள்வதற்காக இலங்கை முன்னெடுத்து வரும் மறுசீரமைப்பு பணிகள் மற்றும் வேலைத்திட்டங்களுக்கு சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund) பாராட்டு தெரிவித்துள்ளது.

நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்கவுக்கும் (Shehan Semasinghe), சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளருமான கென்ஜி ஒகமுரா (Kenji Okamura) உள்ளிட்ட குழுவினருக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வோஷிங்டன் நகரில் நேற்று (15) ஆரம்பமான சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் அரையாண்டு மாநாட்டின் போதே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த மாநாடு கொள்கை வகுப்பாளர்கள், சிவில் சமூகம், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பல உயர் அதிகாரிகளின் பங்கேற்புடன் ஏப்ரல் 19 வரை நடைபெறவுள்ளது.

இரு தரப்பினரும் மிகவும் ஆக்கபூர்வமான கலந்துரையாடலை நடத்தியதாக செஹான் சேமசிங்க தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதன் போது ஒகமுரா, சர்வதேச நாணய நிதியத்தின் தொடக்கத்திலிருந்து இலங்கை அடைந்துள்ள கடின உழைப்பால் ஈட்டிய வெற்றிகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டினார்.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க (Nandalal Weerasinghe) மற்றும் திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன (Mahinda Siriwardana) ஆகியோருடன் இணைந்து, செஹான் சேமசிங்க, ஐ.எம்.எப்பின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளரிடம் சமீபத்திய சமூக-பொருளாதார முன்னேற்றங்கள் குறித்து விளக்கியுள்ளார்.

Share
தொடர்புடையது
1276730 0.jpeg
செய்திகள்உலகம்

ஈரான் சிறைப்பிடித்த எண்ணெய்க் கப்பல் ‘தலாரா’ விடுவிப்பு: 21 பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்!

ஹாா்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் கடந்த வாரம் சிறைப்பிடித்த, மாா்ஷல் தீவுகளின் கொடியேற்றப்பட்ட ‘தலாரா’ (Talara)...

pm modi 13 20251119144744
இந்தியாசெய்திகள்

ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்குப் பயணம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்கு விஜயம் செய்யத் தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

images 5 7
செய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: கால் தவறி கிணற்றில் வீழ்ந்த வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் நபரொருவர் கால் தவறி கிணற்றுக்குள் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்...

images 4 8
இலங்கைசெய்திகள்

அரச மருத்துவமனைகளில் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு: சிகிச்சை சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

அரச மருத்துவமனைகளில் சுமார் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...