24 661deaca7be50
இலங்கைசெய்திகள்

வாகனங்களை இறக்குமதி : பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கை

Share

வாகனங்களை இறக்குமதி : பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கை

வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு இலங்கையின் பொருளாதாரம் இன்னும் நல்ல நிலையில் இல்லை என பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சுற்றுலா பயணிகளின் வருகை மற்றும் வெளிநாட்டு பணியாளர்கள் நாட்டிற்கு அனுப்பும் அந்நிய செலாவணியினால் பொருளாதாரம் குறிப்பிட்ட மட்டத்தில் உள்ளதாக, கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதார கற்கைகள் பிரிவின் பேராசிரியர் பிரியந்த துனுசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் ரூபாயின் பெறுமதி ஓரளவிற்கு வளர்ச்சியடைந்துள்ளது. எனினும் இதனை கொண்டு உடனடியாக வாகன இறக்குமதி செய்ய செல்வது தவறான செயலாகும்.

அரசாங்கத்திற்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்யும் போதும் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே கொள்வனவு செய்ய வேண்டும்.

நாட்டிற்கு தேவையான வாகன இறக்குமதிகள் செய்தால் மீண்டும் நெருக்கடியான நிலைமை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது என அவர் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை எதிர்காலத்தில் படிப்படியாக வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நேற்று அறிவித்தார்.

இது தொடர்பில் ஏற்கனவே விசேட குழுவொன்று தேவையான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....