24 661ced3e91ae3 1
இலங்கைசெய்திகள்

வாகன இறக்குமதிக்கு அனுமதி : நிதி இராஜாங்க அமைச்சின் அறிவிப்பு

Share

வாகன இறக்குமதிக்கு அனுமதி : நிதி இராஜாங்க அமைச்சின் அறிவிப்பு

தேவைக்கு ஏற்ப வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய(Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

மேலும், தற்போது மத்திய வங்கிக்கு சொந்தமான வெளிநாட்டு கையிருப்பு 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளது.

கடந்த காலங்களில் வெளிநாட்டு கையிருப்பு பூஜ்ஜியமாக காணப்பட்டது. தற்போது வெளிநாட்டு கையிருப்பு அதிகரித்துள்ள நிலையில் நாம் இறக்குமதி தடைகளை கட்டம் கட்டமாக நீக்கினோம்.

அதேபோல் தற்போது வாகன இறக்குமதிக்கு மாத்திரமே தடை விதிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் உரிய முறைமையின் கீழ் நாம் தேவைக்கு ஏற்ப வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கியுள்ளோம்.

சுற்றுலாத் துறைக்கு தேவையான 750 வேன்கள் மற்றும் 250 பேருந்துகள் இறக்குமதி செய்ய அனுமதித்துள்ளோம். மிகவும் நுணுக்கமாக தேடிப்பார்த்து ஆராய்ந்த பின்னரே நாம் முடிவுகளை எடுக்கிறோம்.

சுற்றுலாத்துறை வளர்ச்சியடைகிறது. ரூபாயின் பெறுமதி அதிகரிக்கிறது. இதனால், எதிர்காலத்தில் அத்தியாவசியமான வாகனங்கள் எவை, தவிர்க்க முடியாத தேவையுடைய வாகனங்கள் தொடர்பில் ஆராய்ந்த பின்னர் அதற்கு வாகனங்களை இறக்குமதி செய்ய இடம் கொடுப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...