24 661cca8c1bfe0
உலகம்செய்திகள்

ஐநாவால் போரை நிறுத்த முடியாது, உலகு தாங்காது! ஈரான்,கவிஞர் வைரமுத்து வேதனை

Share

ஐநாவால் போரை நிறுத்த முடியாது, உலகு தாங்காது! ஈரான்,கவிஞர் வைரமுத்து வேதனை

இஸ்ரேல், ஈரான் மோதல் குறித்து வேதனை தெரிவித்து கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளார்.

மத்திய கிழக்கில் இஸ்ரேல், ஈரானின் மோதலினால் பதற்றம் அதிகரித்துள்ளது. ஹமாஸ் மீதான தாக்குதலில் இஸ்ரேலுக்கு ஆதரவளித்து வந்த அமெரிக்கா, ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் துணை நிற்க மாட்டோம் என தெரிவித்தது.

ஈரானின் தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்க முயன்றால், மத்திய கிழக்கில் தொடங்கும் மோதல் உலகப்போர் ஆக மாறும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து இஸ்ரேல், ஈரான் போரை ஐ.நா நினைத்தாலும் நிறுத்த முடியாது என்று கவிதை வடிவில் பதிவிட்டுள்ளார்.

அவரது எக்ஸ்தள பதிவில், ”இஸ்ரேல் மீது ஈரானும், ஹமாஸ் மீது இஸ்ரேலும் விசிறியடிக்கும் எறிகணைகள், பாப்பாரபட்டியில் ஈயோட்டிக்கொண்டு பலாச்சுளை விற்றுக் கொண்டிருக்கும் பஞ்சக் கிழவியின் கூடையை உடைக்கின்றன. உலகப் பொருளாதாரம் பின்னல் மயமானது. உலகு தாங்காது, நிறுத்துங்கள் போரை. ஐ.நாவால் முடியாது; அவரவர் நிறுத்தலாம்” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...