24 661cad86a88c2
இந்தியாசெய்திகள்

மோடியின் கால் தூசிக்கு கூட உதயநிதி சமம் இல்லை: சரத்குமார்

Share

மோடியின் கால் தூசிக்கு கூட உதயநிதி சமம் இல்லை: சரத்குமார்

கோயம்புத்தூர் மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து சரத்குமார் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை சரத்குமார் பாஜகவில் இணைத்த நிலையில், அவரது மனைவி ராதிகாவுக்கு விருதுநகர் மக்களவை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து நடிகர் சரத்குமார் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

நடிகர் சரத்குமார் பிரச்சாரத்தில் பேசுகையில், “கடந்த 50 ஆண்டுகளாக இந்தியாவை ஆட்சி செய்த காங்கிரஸ் நல்ல திட்டங்களை செயல்படுத்தவில்லை. அதற்கு பதிலாக பாஜகவை குறை சொல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

பெண்களுக்கு உரிமை தொகை, இலவச பேருந்து வசதி ஆகியவற்றை மக்களுக்கு வழங்கிவிட்டு திமுக அநாகரிகமாக பேசி வருகிறது.

உலகமே பாராட்டும் தலைவராக இருக்கும் நரேந்திர மோடியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்து வருகிறார். அவர் மோடியின் கால் தூசிக்கு கூட சமம் இல்லை.

காங்கிரஸ், திமுக கட்சிகள் சேர்ந்து கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தது. மத்திய அரசு வழங்கும் நிதியை வைத்தும் திமுக ஆக்கப்பூர்வமான திட்டத்தை செயல்படுத்தவில்லை. மீண்டும் மோடி பதவியேற்க அண்ணாமலைக்கு வாக்களியுங்கள்” என்று கூறினார்.

Share
தொடர்புடையது
ampitiya therar
அரசியல்இலங்கைசெய்திகள்

தமிழர்களுக்கு எதிரான வன்முறைக் கருத்து: அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்குப் பிடிவிறாந்து, பயணத்தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களையும், தெற்கில் உள்ள தமிழ் மக்களையும் வெட்டிக் கொல்ல வேண்டும்’ என...

24 6719ef7b673a7
அரசியல்செய்திகள்

டயானா கமகே கடவுச்சீட்டு விசா வழக்கு: மேலதிக சாட்சியங்களுக்காக பிப். 16க்கு ஒத்திவைப்பு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மீது கடவுச்சீட்டு மற்றும் விசாக்கள் தொடர்பாகக் குற்றப் புலனாய்வுத்...

Waqf Board Donates Rs 10 Million 1170x658 1
இலங்கைசெய்திகள்

அனர்த்தத்தில் சேதமடைந்த மதத் தலங்களைப் புனரமைக்க: வக்ஃப் சபை 10 மில்லியன் நிதி நன்கொடை!

கடந்த காலத்தில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் சேதமடைந்த மதஸ்தலங்களை மீண்டும் கட்டியெழுப்பும் பணிகளுக்காக, வக்ஃப் சபையினால்...

Untitled
அரசியல்இலங்கைசெய்திகள்

கிராம உத்தியோகத்தர்களுக்கு எதிரான பொதுவான குற்றச்சாட்டுகள் நிறுத்தப்பட வேண்டும் – இம்ரான் மகரூப் கோரிக்கை!

நாட்டிலுள்ள ஒட்டுமொத்த கிராம உத்தியோகத்தர்களுக்கும் மனஅழுத்தம் ஏற்படும் வகையில் செய்திகள் வெளியிடப்படுவதை நிறுத்த வேண்டும் என்றும்,...