24 661c0a65c4691
இலங்கைசெய்திகள்

நெடுஞ்சாலைகளின் மூலம் ஒரே நாளில் வந்து குவிந்துள்ள வருமானம்

Share

நெடுஞ்சாலைகளின் மூலம் ஒரே நாளில் வந்து குவிந்துள்ள வருமானம்

அதிவேக நெடுஞ்சாலைகளின் மூலம் நான்கு கோடியே நாற்பது லட்சம் (44 மில்லியன்) வருமானம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, நெடுஞ்சாலைகளின் போக்குவரத்து 10 வீதத்தால் அதிகரித்துள்ளதாக நெடுஞ்சாலை நடவடிக்கைகள் மற்றும் பராமரிப்புப் பிரிவின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நேற்றையதினம் மாத்திரம் ஒரு லட்சத்து இருபத்தெட்டாயிரம் வாகனங்கள் இயக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அத்துடன், சாரதிகள் வாகனத்தை சரிபார்த்து நெடுஞ்சாலைகளில் வாகனங்களை செலுத்துவதற்கு ஏற்றதாக இருந்தால் மட்டுமே நெடுஞ்சாலைகளுக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், தெற்கு அதிவேக வீதியின் வெளியேறும் வாயில்களில் இன்று (14) வாகன நெரிசல் ஏற்படும் அபாயம் இருப்பதால், வாகன நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...