24 661c0a65c4691
இலங்கைசெய்திகள்

நெடுஞ்சாலைகளின் மூலம் ஒரே நாளில் வந்து குவிந்துள்ள வருமானம்

Share

நெடுஞ்சாலைகளின் மூலம் ஒரே நாளில் வந்து குவிந்துள்ள வருமானம்

அதிவேக நெடுஞ்சாலைகளின் மூலம் நான்கு கோடியே நாற்பது லட்சம் (44 மில்லியன்) வருமானம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, நெடுஞ்சாலைகளின் போக்குவரத்து 10 வீதத்தால் அதிகரித்துள்ளதாக நெடுஞ்சாலை நடவடிக்கைகள் மற்றும் பராமரிப்புப் பிரிவின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நேற்றையதினம் மாத்திரம் ஒரு லட்சத்து இருபத்தெட்டாயிரம் வாகனங்கள் இயக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அத்துடன், சாரதிகள் வாகனத்தை சரிபார்த்து நெடுஞ்சாலைகளில் வாகனங்களை செலுத்துவதற்கு ஏற்றதாக இருந்தால் மட்டுமே நெடுஞ்சாலைகளுக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், தெற்கு அதிவேக வீதியின் வெளியேறும் வாயில்களில் இன்று (14) வாகன நெரிசல் ஏற்படும் அபாயம் இருப்பதால், வாகன நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
1276730 0.jpeg
செய்திகள்உலகம்

ஈரான் சிறைப்பிடித்த எண்ணெய்க் கப்பல் ‘தலாரா’ விடுவிப்பு: 21 பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்!

ஹாா்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் கடந்த வாரம் சிறைப்பிடித்த, மாா்ஷல் தீவுகளின் கொடியேற்றப்பட்ட ‘தலாரா’ (Talara)...

pm modi 13 20251119144744
இந்தியாசெய்திகள்

ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்குப் பயணம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்கு விஜயம் செய்யத் தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

images 5 7
செய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: கால் தவறி கிணற்றில் வீழ்ந்த வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் நபரொருவர் கால் தவறி கிணற்றுக்குள் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்...

images 4 8
இலங்கைசெய்திகள்

அரச மருத்துவமனைகளில் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு: சிகிச்சை சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

அரச மருத்துவமனைகளில் சுமார் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...