24 6619ce6c118a0
இலங்கைசெய்திகள்

போதைப்பொருளுடன் இலங்கை கடற்பரப்பில படகு பறிமுதல்

Share

போதைப்பொருளுடன் இலங்கை கடற்பரப்பில படகு பறிமுதல்

200 கிலோ ஹெராயின் மற்றும் ஐஸ் என்ற கிரிஸ்டல் மெத்தாம்பெட்டமைன் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருட்களுடன் பல நாள் கடற்றொழில் இழுவை படகு ஒன்றை இலங்கை கடற்படையினர், கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில், குறித்த படகு நாட்டின் தெற்கு கடற்கரையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

எனினும் இந்தப் போதைப் பொருளின் சந்தைப்பெறுமதி குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

இதன்போது படகில் இருந்த பத்து பணியாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் காலி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என கடற்படைப்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
1276730 0.jpeg
செய்திகள்உலகம்

ஈரான் சிறைப்பிடித்த எண்ணெய்க் கப்பல் ‘தலாரா’ விடுவிப்பு: 21 பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்!

ஹாா்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் கடந்த வாரம் சிறைப்பிடித்த, மாா்ஷல் தீவுகளின் கொடியேற்றப்பட்ட ‘தலாரா’ (Talara)...

pm modi 13 20251119144744
இந்தியாசெய்திகள்

ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்குப் பயணம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்கு விஜயம் செய்யத் தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

images 5 7
செய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: கால் தவறி கிணற்றில் வீழ்ந்த வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் நபரொருவர் கால் தவறி கிணற்றுக்குள் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்...

images 4 8
இலங்கைசெய்திகள்

அரச மருத்துவமனைகளில் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு: சிகிச்சை சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

அரச மருத்துவமனைகளில் சுமார் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...