24 6619f204dcfd7
உலகம்செய்திகள்

போலி நாணயத்தாள் தயாரிக்கும் நபருக்கு நேர்ந்த கதி

Share

போலி நாணயத்தாள் தயாரிக்கும் நபருக்கு நேர்ந்த கதி

தென்னிலங்கையில் போலி நாணயத்தாள்களை அச்சிட தயாரான நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அஹங்கம பிரதேசத்தில் 500, 1000 மற்றும் 5000 ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்படும் தாள்கள் மற்றும் கணனி ஒன்றும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

காலி பிரிவு குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் நேற்று இரவு குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பில் தனியார் நிறுவனமொன்றில் பணி புரியும் 47 வயதான அஹங்கம பிரதேசத்தை சேர்ந்தவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

போலி நாணயத்தாள்களுக்கு மேலதிகமாக சுற்றுலாப் பயணிகளின் வீசா காலத்தை நீடிப்பதற்காக பெறப்பட்ட 10 கடவுச்சீட்டுகளும் சந்தேகநபரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்காக அஹங்கம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் இன்று காலி நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Share
தொடர்புடையது
12 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நானுஓயா கிளாஸ்கோ தோட்டத்தில் தீ விபத்து: குடியிருப்பு முற்றாக எரிந்து சாம்பல்!

நுவரெலியா, நானுஓயா பகுதியில் உள்ள கிளாஸ்கோ தோட்டத்தின் மத்திய பிரிவில் இன்று (மார்ச் 21, 2026)...

11 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தனியார் பேருந்து சேவைகள் 50 சதவீதம் குறையும் அபாயம்: எரிபொருள் தட்டுப்பாட்டால் மக்கள் தவிப்பு!

இலங்கை முழுவதும் தனியார் பேருந்துகளுக்கான எரிபொருள் விநியோகத்தில் நிலவும் சீரற்ற தன்மை காரணமாக, பொதுப் போக்குவரத்து...

10 18
உலகம்செய்திகள்

முதலீட்டாளர்களைத் தவறாக வழிநடத்திய ஈலோன் மஸ்க்: அமெரிக்க நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

கடந்த 2022-ஆம் ஆண்டு அப்போதைய ட்விட்டர் (தற்போது X) நிறுவனத்தைக் கையகப்படுத்தும் நடவடிக்கையின் போது, அதன்...

09 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் ஆட்சியாளர்களுக்குத் தெரிந்தே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்ததா? அருட்தந்தை ரோஹான் சில்வா கேள்வி!

2019-ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் குறித்து, முன்னாள் ஆட்சியாளர்கள் மற்றும் அரசியல்...