24 6619e18a7fc9b
இலங்கைசெய்திகள்

இன்று மதுபானசாலைகள் திறக்கப்படுமா! புதிய அறிவிப்பு

Share

இன்று மதுபானசாலைகள் திறக்கப்படுமா! புதிய அறிவிப்பு

இன்றையதினம்(13.04.2024) மதுபானசாலைகள் திறக்கப்படும் என்று சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் பொய்யானது என கலால் திணைக்களம் மறுத்துள்ளது.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று (12.04.2024) மற்றும் இன்று (13.04.2024) நாடு பூராகவும் மதுபான விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது என கலால் திணைக்களம் அறிவித்தல் விடுத்துள்ளது.

எவ்வாறாயினும், வீட்டு விருந்தினர்கள், ஹோட்டல்களில் தங்கியிருக்கும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில்(Sri Lanka Tourism Development Authority) பதிவு செய்யப்பட்டுள்ள மூன்று நட்சத்திர வரம்பிற்கு அப்பால் உள்ள தங்குமிடங்கள் (boutique villas) என்பவற்றிற்கு இது பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புத்தாண்டு காலத்தில் மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக பொய்யான தகவல்களை பரப்பும் குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என திணைக்களம் எச்சரித்துள்ளது.

மேலும் நாட்டில் வழக்கமான மதுபான விற்பனை ஏப்ரல் 14, ஞாயிறு காலை 8.00 மணி முதல் ஆரம்பமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
000 86jq4zl
செய்திகள்இலங்கை

இலங்கையில் புதிய சூறாவளி வதந்தி பொய்: டிச. 4-5இல் லேசான மழைக்கே வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையில் வரும் நாட்களில் புதிய சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பரவி வரும் வதந்திகள் தவறானவை என்று...

592732937 1280508897442061 4469225105931887604 n
இலங்கை

அனர்த்த நிவாரண நிதியாக ரூ. 100 இலட்சம் நன்கொடை: இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் ஜனாதிபதிச் செயலரிடம் கையளிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் செயற்திட்டத்துடன் இணைந்ததாக,...

images 3
செய்திகள்உலகம்

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல்: ஒரே வாரத்தில் 3 பேருக்குத் தூக்கு – இந்த ஆண்டு 17 மரண தண்டனைகள் நிறைவேற்றம்!

சிங்கப்பூரில் கடந்த ஒரு வாரத்தில் மூன்று பேர் போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்காகத் தூக்கிலிடப்பட்டனர். இதன் மூலம்...

images 2
செய்திகள்உலகம்

இஸ்ரேல் – ஹமாஸ் போர்: பலி எண்ணிக்கை 70,100ஐ அண்மித்தது!

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் போர் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 70,100-ஐ அண்மித்துள்ளதாக காஸா...