24 66170b9670508
அரசியல்இலங்கைசெய்திகள்

புத்தாண்டின் பின்னர் விஸ்வரூபமெடுக்கப்போகும் சுதந்திரக்கட்சி மோதல்

Share

புத்தாண்டின் பின்னர் விஸ்வரூபமெடுக்கப்போகும் சுதந்திரக்கட்சி மோதல்

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நெருக்கடி நீடிப்பதால் கட்சித் தலைமையகத்தைக் கைப்பற்றும் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என இரு தரப்பினரும் தெரிவிக்கின்றனர்.

புத்தாண்டு விடுமுறையின் பின்னர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தை திறந்து அதிகாரத்தை கைப்பற்றி கட்சியின் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆதரவுடன் செயற்படும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அணியினர் தெரிவித்துள்ளனர்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியலமைப்பு உடனடியாக மாற்றப்பட்டு, நாயக்கா என்ற புதிய பதவி நிறுவப்படும் எனவும், முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவிற்கு இனி அதன் தலைவர் பதவியில் இருக்க இடமளிக்கப்பட மாட்டாது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆதரவு குழுவிற்கு கட்சியின் அதிகாரம் இல்லை என முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவான குழு குறிப்பிடுகின்றது.

நிமல் சிறிபால டி சில்வாவை பதில் தலைவர் பதவியில் இருந்து நீக்கவுள்ளதாகவும், அதற்காக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அந்த குழுவினர் தெரிவிக்கின்றனர்.

இரண்டு குழுக்களாக பிளவுபட்டுள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நெருக்கடி புத்தாண்டு பண்டிகை காலத்தின் பின்னர் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் என இரு குழுக்களின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share
தொடர்புடையது
09 A corruption
செய்திகள்இலங்கை

பிடியாணை, போதை வாகனம் உட்பட ஒரே நாளில் 5000க்கும் அதிகமானோர் கைது!

காவல்துறையினர் மேற்கொண்ட தொடர்ச்சியான நடவடிக்கைகளின் விளைவாக, பிடியாணை மற்றும் பல்வேறு போக்குவரத்து குற்றங்களுக்காக ஒரே நாளில்...

images 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறையில் அதிர்ச்சிச் சம்பவம்:  மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது!

அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில்...

1795415 01
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவனில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் நேற்று சனிக்கிழமை...

aJqHp SD
செய்திகள்உலகம்

இந்தோனேசியா மத்திய ஜாவாவில் பாரிய மண்சரிவு: கடும் மழைவீழ்ச்சியால் 11 பேர் உயிரிழப்பு, 12 பேரைக் காணவில்லை!

இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் பெய்த கடும் மழைவீழ்ச்சியால் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி 11...