24 66179e5949742
இலங்கைசெய்திகள்

தந்தையால் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்ட பிள்ளைகள்

Share

தந்தையால் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்ட பிள்ளைகள்

திருகோணமலை (Trincomalee) தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இரண்டு பிள்ளைகளை தவறான நடத்தைக்கு உட்படுத்தியமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பிள்ளைகளின் தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தம்பலகாமம் சிராஜ் நகர் பகுதியில் வசித்து வரும் முகமது சனுஷ் என்ற 28 வயதுடைய நபரையே இவ்வாறு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மனைவி வெளிநாட்டுக்குச் சென்றிருந்த நிலையில் 2 பிள்ளைகளையும் தனது கணவனின் கண்காணிப்பில் விட்டுச் சென்றுள்ள போதே இரு சிறுவர்களும் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் இரு சிறுவர்களிடமும் வாக்குமூலம் பெற்றதை அடுத்து சந்தேக நபரை கைது செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபரை கந்தளாய் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும், குறித்த தந்தையால் தவறான நடத்தைக்குட்பட்ட இரண்டு சிறுவர்களும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
images 10 4
செய்திகள்இலங்கை

தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியம்? அரசாங்கம் புதிய திட்டம் குறித்து ஆலோசனை!

தனியார் துறை ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை (Pension Scheme)...

sajith
செய்திகள்இலங்கை

நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பெண் ஊழியர் துன்புறுத்தல் அறிக்கை ஏன் மறைக்கப்படுகிறது? சஜித் பிரேமதாச கேள்வி!

நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமல்...

செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு இறுதிக்கட்டத்தில்! ஊழியர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் என அறிவிப்பு!

நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை மின்சார சபையின் (CEB)...

96b6d210 5408 11ef b8c3 f76c0a5f70a8.jpg
செய்திகள்உலகம்

யுனுஸின் ஆட்சி சட்டவிரோதமானது! – இந்தியாவிலிருந்து ஷேக் ஹசீனா விடுத்த முதல் பகிரங்க அறிக்கை!

கடந்த 2024-ஆம் ஆண்டு பங்களாதேஷில் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில்...