24 661756f40ec85
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் மரணங்கள்

Share

யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் மரணங்கள்

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த வருடம் புற்று நோயினால் 71 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தகவலை யாழ்ப்பாண மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி யமுனானந்தா தெரிவித்துள்ளார்.

அத்துடன் யாழ். மாவட்டத்தில் 776 பேர் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் டிசம்பர் வரையான காலப்பகுதியில் குடல் புற்றுநோய் காரணமாக 88 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 7 பேர் இறந்துள்ளனர்.

இரைப்பைப் புற்றுநோயால் 40 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 5 பேர் இறந்துள்ளனர். ஈரல் புற்றுநோயால் 40 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 8 பேர் இறந்துள்ளனர்.

சுவாசாப் புற்றுநோயால் 67 பேர் பாதிக்கப்பட நிலையில் 8 பேர் இறந்துள்ளனர். மார்பகப் புற்றுநோயால் 83 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 4 பேர் இறந்துள்ளனர்.

கருப்பைப் புற்றுநோயால் 27 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 3 பேர் இறந்துள்ளனர். கருப்பைக் கழுத்துப் புற்றுநோயால் 48 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 3 பேர் இறந்துள்ளனர்.

மேலும் ஆண்களில் சிறுநீர்ப்பைப் புற்றுநோயால் 10 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குருதிப்பட்டி நோயால் 37 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஆண்களில் முன்னாண் மற்றும் நரம்பியல் சார்ந்த புற்றுநேய்களால் 30 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தைரொய்டுப் புற்றுநோயால் 20 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர் என

யாழ்ப்பாண மாவட்டத்தில் புற்று நோயின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் சரியான உணவுப் பழக்கம் புற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கு உதவும் என அவர் தெரிவித்துள்ளார்.

புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதற்கான சிகிச்சை முறைகளை உரிய வகையில் மேற்கொள்ளும் போது குறித்த நோய் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.

30 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் தமது மார்பகங்களை சுய பரிசோதனை செய்வதோடு, ஏதேனும் கட்டிகள் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை நாட வேண்டும் எனவும் யாழ்ப்பாண மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி யமுனானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

Share
தொடர்புடையது
Arrested With
இலங்கை

கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது...

Weapons
இலங்கை

சிறைச்சாலைக்குள் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் – தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தேங்காய்கள்.

நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது கைதிகள் அதிகாரிகளைத் தாக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்களின்...

ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...

penson
இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

  வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக...