24 6616257063f4d
உலகம்செய்திகள்

பாலஸ்தீனத்தை அங்கீகரித்தாலும் ஹமாஸுக்கு இடமில்லை

Share

பாலஸ்தீனத்தை அங்கீகரித்தாலும் ஹமாஸுக்கு இடமில்லை

பாலஸ்தீன(Palestine) தேசத்தை அங்கீகரிக்க தயார் என அவுஸ்திரேலிய(Australia) வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், பாலஸ்தீன தேசத்தின் ஆட்சியில் ஹமாசிற்கு இடமில்லையென அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு தற்போதைய வன்முறையை முடிவிற்கு கொண்டுவருவதற்கு இஸ்ரேலியர்களும் மற்றும் பாலஸ்தீனியர்களும் அருகருகில் வசிக்கும் இரண்டு நாடு தீர்வே ஒரே நம்பிக்கையென அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பல தசாப்தங்களாக இந்த அணுகுமுறையை பின்பற்றுவதற்கு அனைத்து தரப்பினரும் தவறியமையும் பாலஸ்தீன தேசம் குறித்த விடயத்தில் ஈடுபாட்டை காண்பிப்பதற்கு நெதன்யாகு அரசாங்கம் தவறியமையும் பரந்துபட்ட அதிருப்தியை ஏற்படுத்தியிருந்ததாக பெனிவொங் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் காரணமாக இரண்டு தேசத்தினை நோக்கிய செயற்பாடாக பாலஸ்தீன தேசம் குறித்து சர்வதேச சமூகம் தற்போது சிந்திக்கின்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனோடு பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிப்பது எதிரிக்கு வெகுமதி அளிக்கும் செயல் என்பது தவறான கருத்து அத்தோடு இஸ்ரேலின் பாதுகாப்பு என்பது இரண்டுதேச கொள்கைகயிலேயே தங்கியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இரண்டுதேச கொள்கையை ஏற்றுக்கொள்வது ஹமாஸை பலவீனப்படுத்த உதவுமென பெனிவொங் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 215
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு: குற்றப் பிரமுகரின் சகோதரர் உயிர் தப்பினார்!

அஹுங்கல்லா பகுதியில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த ‘லோக்கு பட்டி’ என்பவரின் சகோதரரான ‘பொடி பட்டி’...

world 217
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு விடுமுறை முடிந்து கொழும்பு திரும்புவோருக்காக விசேட இரயில் சேவைகள் அறிவிப்பு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறையைத் தனது சொந்த ஊர்களில் கொண்டாடிவிட்டு மீண்டும் கொழும்பு திரும்பும்...

world 214
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முதலாம் வகுப்பு மாணவர்களுக்கான செயல்பாட்டுப் புத்தக விநியோகம் ஆரம்பம்!

இலங்கையிலுள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் முதலாம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் மற்றும் மூன்றாம் பருவங்களுக்குரிய செயல்பாட்டுப் புத்தகங்களை...

world 213
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெதுரு ஓயா துயரம்: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு – அனைத்து உடல்களும் மீட்பு!

குருநாகல், கோபேகானே பகுதியில் உள்ள தெதுரு ஓயாவில் நீராடச் சென்றபோது நீரில் மூழ்கி மாயமானவர்களில் எஞ்சியிருந்த...