24 6615ec8cb1232
இலங்கைசெய்திகள்

கொழும்பு உட்பட மேல் மாகாணத்தை அச்சுறுத்தும் மர்ம கும்பல்

Share

கொழும்பு உட்பட மேல் மாகாணத்தை அச்சுறுத்தும் மர்ம கும்பல்

மேல் மாகாணத்தில் பாதாள உலக குழுக்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு கைத்துப்பாக்கிகள் கொண்ட விசேட பொலிஸ் மோட்டார் சைக்கிள் பிரிவு களமிறங்கவுள்ளது.

இந்த குழுவினர் விசேட பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் மேற்பார்வையில் விசேட பயிற்சி பெறும் இந்தக் குழுவினர் விசேட தாக்குதல் மோட்டார் சைக்கிள் அணியாக வரவுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதாள உலகக் குழுக்கள் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்துபவர்களுக்கு உடனடி பதிலடி கொடுப்பதற்காக இந்தக் குழுக்களுக்கு விசேட பயிற்சிகள் வழங்கப்படுவதுடன், குழுவிற்கு விசேட சீருடைகளும் வழங்கப்படும் என அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் திணைக்களத்தில் திறமையான அதிகாரிகளை இந்தப் பிரிவில் இணைத்துக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த மோட்டார் சைக்கிள் தாக்குதல் குழுக்கள் ஆரம்ப கட்டமாக கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு மற்றும் கொழும்பு மத்திய பிரிவுகளில் நிலைநிறுத்தப்பட உள்ளன.

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...