24 6614c4ec51220
உலகம்செய்திகள்

தேர்தல் நேரத்தில் நாம் தமிழர் கட்சிக்கு கிரீன் சிக்னல்

Share

தேர்தல் நேரத்தில் நாம் தமிழர் கட்சிக்கு கிரீன் சிக்னல்

தேர்தலுக்கு முன்பாக எத்தனை பேரை சிறையில் அடைப்பது என்று கூறிய உச்சநீதிமன்றம் சாட்டை துரைமுருகனின் ஜாமீனை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் குஷ்புவை சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக நாம் தமிழர் கட்சி நிர்வாகியான சாட்டை துரைமுருகன் கடந்த 2011 -ம் ஆண்டில் தஞ்சாவூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

பின்னர், அவருக்கு உயர் நீதிமன்ற மதுரைகிளை நிபந்தனை ஜாமீன் வழங்கியிருந்தது. அடுத்த சில நாட்களிலேயே மீண்டும் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டார்.

உயர் நீதிமன்றம் விதித்த நிபந்தனையை மீறியதாகக் கூறி தஞ்சாவூர் வழக்கில் வழங்கிய ஜாமினை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடடு செய்த துரைமுருகனுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. அதிலிருந்து இரண்டரை ஆண்டுகளாக ஜாமினில் உள்ளார்.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்தவழக்கறிஞர், ஜாமீனில் இருக்கும் சாட்டை துரைமுருகன் அவதூறு கருத்துளை தெரிவிக்கக்கூடாது என நிபந்தனை விதிக்க வேண்டும் என்று கூறினார்.

சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பும் அனைவரையும் சிறையில் அடைக்கத் தொடங்கினால் தேர்தலுக்கு முன்பாக எத்தனை பேரை சிறையில் அடைப்பது என்று கேட்ட நீதிபதிகள் அவரது கோரிக்கையை ஏற்க மறுத்தனர்.

மேலும், அவர் தனது ஜாமீன் சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தியதாக எந்த ஆதாரமும் இல்லை என்று இடைக்கால ஜாமீனை நீட்டித்து உத்தரவிட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...