24 6614dd0a21ad9
இலங்கைசெய்திகள்

இலங்கையில் இலவச கல்விக்கு ஏற்படும் ஆபத்து

Share

இலங்கையில் இலவச கல்விக்கு ஏற்படும் ஆபத்து

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட கல்விக் கொள்கை கட்டமைப்பின்படி நாட்டின் கல்வி முறையை தனியார் துறைக்கு மாற்றுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழக கலைப் பீட ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனால் தற்போதுள்ள இலவச பல்கலைக்கழக கல்வி நீக்கப்பட்டு கட்டணம் செலுத்தி கல்வி கற்கும் வாய்ப்பு ஏற்படும் என கொழும்பு பல்கலைக்கழக கலைப் பீட ஆசிரியர் சங்கத்தின் தலைவர் கலாநிதி அதுல சமரகோன் தெரிவித்துள்ளார்.

இச்சட்டம் நிறைவேற்றப்படுவதன் மூலம் நாட்டில் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக கல்வியை அரசாங்கம் முன்னெடுக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கொள்கை கட்டமைப்பிற்கு ஏற்கனவே அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதுடன், அது நாடாளுமன்றத்தின் கல்வி தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவிற்கும் அனுப்பப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இம்மாதத்துக்குள் கொள்கைக் கட்டமைப்பு நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளதாகவும், இது அரசாங்கத்தின் கொள்கைப் பிரேரணை என்பதனால் அதனை நீதிமன்றத்தினால் விசாரணை செய்ய முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
02 15
செய்திகள்உலகம்

எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்த மேலதிக கப்பல்கள் வருகை: பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் சர்வதேச எரிபொருள் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு,...

01 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் இன்று சில பகுதிகளில் மழை மற்றும் பனிமூட்டமான வானிலை!

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள இன்றைய வானிலை அறிக்கையின்படி, நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்குப்...

29 6
செய்திகள்உலகம்

போர்நிறுத்தத்திற்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ ஈரான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை: அப்பாஸ் அரக்சி

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான தற்போதைய போர்ச் சூழலில், ஈரான் எந்தவொரு போர்நிறுத்தத்தையோ...

28 6
செய்திகள்இந்தியா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டது

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 10-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது....