24 6611d2017cfad
உலகம்செய்திகள்

பூமிக்கு அடியில் மறைந்துள்ள மிகப்பெரிய கடலை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்

Share

பூமிக்கு அடியில் மறைந்துள்ள மிகப்பெரிய கடலை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்

அமெரிக்கா(America) – இல்லினாய்ஸ், எவன்ஸ்டனில் உள்ள நார்த் வெஸ்டர்ன்(Northwestern) பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், பூமியின் மேற்பரப்பிற்கு அடியில் மறைந்திருக்கும் ஒரு பரந்த நீர் பரப்பினை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த நிலத்தடி நீர் ஆதாரம் பூமியில் உள்ள அனைத்து கடல்களையும் விட மூன்று மடங்கு பெரியதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 700 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த நீர் பரப்பு, பூமியின் புவியியல் மற்றும் நீர் சுழற்சியை உணர புதிய வழிகளை இந்த ஆராய்ச்சி தொடக்கப்புள்ளி என்றும் பூமியின் நீரின் தோற்றத்தை ஆராயும் போது இது கண்டறியப்பட்டதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் ரிங்வுடைட்(Ringwoodite) எனப்படும் கனிமத்தில் மறைந்திருக்கும் கடல் ஒன்றையே ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளதுடன் பூமியின் நீரின் தோற்றத்தை நாம் உணரும் விதத்தை சவாலுக்குட்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி நார்த் வெஸ்டர்ன் பல்கலைக்கழக ஆராய்ச்சிக்கு தலைமை வகித்த விஞ்ஞானி ஸ்டீவன் ஜேக்கப்சன் கூறுகையில்,

‛‛நாம் வாழும் பூமிக்கு தண்ணீர் பூமிக்கடியில் இருந்து வந்தது என்பதை உறுதி செய்யும் வகையில் இந்த ஆராய்ச்சி அமைந்துள்ளதுடன் இதற்கான வலுவான ஆதாரத்தை இந்த ஆய்வு காட்டுகிறது.

பூமிக்கடியில் நிகழும் மாற்றங்களை அறிய நிலநடுக்கங்களை பற்றிய ஆய்வும் செய்யப்பட்டது.

அந்தவகையில் 2000 நிலநடுக்கங்களின்போது ஏற்பட்ட 500 நிலஅதிர்வுகளின் அலைகளை ஆராயப்பட்டன. அப்போது நிலநடுக்கம் பூமிக்கடியில் மையம் கொண்டுள்ள தூரத்தை பொறுத்து அதிர்வுகளின் அலைவேகம் என்பது மாறுபட்டது.

இந்த அலைவேக மாறுபாட்டை ஆய்வு செய்தபோது பூமிக்கடியில் ஈரமான பாறைகள் இருப்பதும், ஆழம் செல்ல செல்ல அதன் அலைவேக மாறுபாடு குறைந்து வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுவே பூமியின் மேற்பரப்பில் உள்ள கடல் அளவை விட 3 மடங்கு பெரிய கடல் மறைந்துள்ளதை கண்டுபிடிக்க உதவியது” என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த ஆய்வு குறித்த விபரம் 2014 ஆம் ஆண்டில் “ Dehydration melting at the top of the lower mantle ”என்ற தலைப்பில் ஆய்வு கட்டுரையாக வெளியாகி இருந்தது.

அதில் ரிங்வுடைட்(Ringwoodite) எனப்படும் நீல நிற பாறைக்குள் பூமிக்கடியில் பிரமாண்ட கடல் மறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
28 1
உலகம்செய்திகள்

ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டம்!

மத்திய கிழக்கில் ஈரான் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த நாட்டுடன் எவ்வித ஒப்பந்தங்களும் செய்துகொள்ளப்பட...

27 1
செய்திகள்உலகம்

தெஹ்ரானில் உள்ள ஈரானின் இரகசிய நிலத்தடி பதுங்கு குழி அழிப்பு: இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல்!

ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் மையப்பகுதியில், ஈரானின் முன்னாள் உயர்மட்டத் தலைவரான அலி கமேனிக்காக உருவாக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான...

26 2
செய்திகள்உலகம்

இந்தியப் பெருங்கடலில் ஈரானியக் கப்பல்கள்: இந்தியாவிலும் இலங்கையிலும் தஞ்சம், அமெரிக்காவுடனான மோதலில் திருப்பம்!

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஈரானியக் கடற்படைக்குச் சொந்தமான மூன்று போர்க்கப்பல்கள் ஒரே காலப்பகுதியில் சிக்கலுக்கு உள்ளாகியுள்ள...

25 2
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகள்: டொனால்ட் ட்ரம்ப் தொடர்பான விடுபட்ட FBI ஆவணங்களை வெளியிட்டது அமெரிக்க நீதித்துறை!

ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களின் ஆரம்பகட்ட வெளியீட்டில் விடுபட்டிருந்த, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான...