24 6610a83a1bd4b
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பிள்ளைகளை கொலை செய்ய முயன்ற தந்தை

Share

பொலநறுவையில் (Polonnaruwa) தந்தை கத்தியால் குத்தியதில் மகள் மற்றும் மகன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹிகுரகொட (Hingurakgoda), ஜயந்திபுர உதனகம பிரதேசத்தில் வசிக்கும் 20 வயதான யுவதியும் 18 வயதான இளைஞனும் காயமடைந்துள்ளனர்.

கடந்த 3ஆம் திகதி இரவு 9:30 மணியளவில் ஏற்பட்ட சண்டையின் பின்னர் தந்தை தனது இரண்டு பிள்ளைகளையும் கத்தியால் குத்தியுள்ளார். மகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மகளின் தங்க பென்டனை கேட்டதால் ஏற்பட்ட தகராறு காரணமாக தந்தை பிள்ளைகளை தாக்கியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த இரண்டு பிள்ளைகளின் தாயும் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதாகவும், அவர்கள் தந்தையுடன் வீட்டில் தங்கி இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Share
தொடர்புடையது
20 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2027ஆம் ஆண்டில் முன்பள்ளிகளுக்கான புதிய பாடத்திட்டம்: பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு

2027ஆம் ஆண்டிலிருந்து முன்பள்ளிகளுக்கான புதிய தேசிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும், அதற்கேற்ப ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சிகள்...

19 12
செய்திகள்அரசியல்இலங்கை

பாதெனிய – அனுராதபுரம் பிரதான வீதியில் விபத்து: அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் சகோதரர் உயிரிழப்பு!

பாதெனிய – அனுராதபுரம் பிரதான வீதியின் மஹகல்கடவல பகுதியில் இன்று (மார்ச் 15) இடம்பெற்ற சாலை...

18 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தகவல் தொழில்நுட்ப யுகத்தில் ஊடகப் பொறுப்புணர்வு: பிரதமர் ஹரிணி அமரசூரியவின் வலியுறுத்தல்

தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்களின் வளர்ச்சி, தகவல்களை ஜனநாயகப்படுத்தியுள்ள அதேவேளையில், அவற்றின் உண்மைத்தன்மை மற்றும்...

17 14
செய்திகள்அரசியல்இலங்கை

அசோக ரன்வலவுக்கு எதிராக மஹர நீதிமன்றம் பிடியாணை பிறப்பிப்பு

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான அசோக ரன்வலவுக்கு எதிராக மஹர நீதவான்...