24 660f5f9f195e1
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டில் வாழும் பிள்ளைகள் ஆலோசனை : இலங்கையில் கொலை செய்யப்பட்ட தந்தை

Share

வெளிநாட்டில் வாழும் பிள்ளைகள் ஆலோசனை : இலங்கையில் கொலை செய்யப்பட்ட தந்தை

மாத்தறை பிரதேசத்தில் மனைவியால் கொலை செய்யப்பட்ட கணவன் தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

வெளிநாட்டில் பணிபுரியும் பிள்ளைகளின் வீடியோ அழைப்பு அறிவுறுத்தலின் பேரில் தாய் கொலையை செய்ததாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வெலிகம தெனிபிட்டிய கொஸ்கஹஹேன பிரதேசத்தை சேர்ந்த பிரேமகுமார என்ற 42 வயதுடைய நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2ஆம் திகதி இரவு குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த போது வீட்டிற்கு அருகில் உள்ள கம்பத்தில் மனைவியால் கணவன் கட்டி வைக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர்.

இறந்தவர் குடித்துவிட்டு வந்து தனது மனைவியை பலமுறை துன்புறுத்தியுள்ளார். மனைவி, அயல் வீட்டாரின் உதவியுடன் காப்பாற்றப்பட்டுள்ளார்.

வீட்டின் முன் நாற்காலியில் அமரவைத்து விட்டு கணவனை கம்பத்தில் கட்டிவைத்தனர். இதற்கிடையில் வெளிநாட்டில் உள்ள பிள்ளைகள் வீடியோ அழைப்பு மேற்கொண்டு விடயங்களை கேட்டறிந்தனர்.

தொந்தரவு செய்யும் தந்தையைத் தாக்குமாறு தாயாரிடம் கூறியுள்ளனர். அதற்கமைய, மனைவி மற்றும் ஏனையோரால் கணவர் தாக்கப்பட்டு மயக்கமடைந்த நிலையில் வெலிகம வாலான அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும், அந்த நபர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்.

கழுத்தில் கட்டப்பட்ட கயிறு மாட்டிக் கொண்டதன் காரணமாக குறித்த நபர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டதுடன், உயிரிழந்தவரின் மனைவி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏனைய சந்தேக நபர்களை கைது செய்யும் நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share
தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...