24 660e1f5f70cb4
இலங்கைசெய்திகள்

98000 கோடி வரிப்பணத்தை வசூலிக்க முடியாத நிலையில் அரசாங்கம்

Share

98000 கோடி வரிப்பணத்தை வசூலிக்க முடியாத நிலையில் அரசாங்கம்

அரசால் வசூலிக்கப்படக்கூடிய 98,000 கோடி ரூபாய் வரிப்பணத்தை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த பணத்தை வசூலிக்காமல் நிதி இராஜாங்க அமைச்சர் தலைமையிலான குழு வேறு உண்மைகளை முன்வைத்து வசூலிப்பதனை தவிர்க்கும் கோட்பாட்டை பின்பற்றுவதாக தெரியவந்துள்ளது.

நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மற்றும் ஷெஹான் சேமசிங்க ஆகியோர் வரி வசூலிப்பவர்களை பாதுகாப்பதில் முன்னணியில் உள்ளனர்.

2022ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகம் தயாரித்த அறிக்கையில், அரசாங்கம் வசூலிக்கக் கூடிய 90,400 கோடி ரூபாய் வரித் தொகை வசூலிக்கப்படவில்லை என முதலில் தெரியவந்துள்ளது.

இது தெரிய வந்து ஓராண்டுக்கு மேலாகியும், அந்த வரி திருடர்கள் இன்னும் தலைமறைவாக உள்ளனர்.

இதற்கிடையில், 98,000 கோடி வசூலிக்கப்பட வேண்டிய வரி கைவிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்திற்கு இது தொடர்புடைய குழுவின் அறிக்கையில் தெரியவந்துள்ளது.

நிதியமைச்சர் ரணில் விக்ரமசிங்கவினால் மார்ச் 25ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய, இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு விதிக்கப்பட்ட வரி 65 ரூபாவிலிருந்து 1 ரூபாவாக குறைக்கப்பட்டிருப்பதன் மூலம் வரி மோசடி செய்பவர்களுக்கு அரசாங்கம் மேலும் உதவும் செயலாகியுள்ளதென குற்றம் சுமதப்பட்டுள்ளது.

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...