24 660b96dbbbe45
இலங்கைசெய்திகள்

நாடளாவிய ரீதியில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் விசேட கழிவு

Share

நாடளாவிய ரீதியில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் விசேட கழிவு

நாடளாவிய ரீதியில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் மக்கள் பொருட்களை கொள்வனவு செய்யும் போது அவர்கள் விசேட கழிவை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

அதன்படி இவ்வாறு பொருட்களை கொள்வனவு செய்ய வருபவர்களில் பொலித்தீன் பைகளை கேஷ் கவுன்டரில் பெற்றுக் கொள்ளாத அல்லது பொருட்களை கொண்டு செல்ல மீண்டும் பயன்படுத்தக்கூடிய பையை கொண்டு வரும் வாடிக்கையாளர்களுக்கு இவ்வாறு கழிவினை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 500 ரூபாவுக்கும் அதிக தொகையை கொண்ட பில்களுக்கு 5 ரூபா கழிவு வழங்கப்படவுள்ளது.

இதற்காக, சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான மேம்பாடு தொடர்பான நாடாளுமன்ற மேற்பார்வைக் குழு கூட்டத்தில், பல்பொருள் அங்காடிகளின் உயர் நிர்வாகத்திடம் இருந்து ஒப்புதல் பெறப்பட்டதாக, நாடாளுமன்ற தகவல் தொடர்பு துறை கூறியுள்ளது.

இலங்கையில் உள்ள சில முன்னணி பல்பொருள் அங்காடிகளின் தலைவர்கள், ஆயத்த ஆடை விற்பனை நிலையங்களின் தலைவர்கள் மற்றும் பேனா உற்பத்தி நிறுவனங்களின் தலைவர்களும் மேற்படி குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
ஹட்டன் கல்வி வலயம்
இலங்கை

ஹட்டன் கல்வி வலயம் வெளியிட்டுள்ள தகவல்.

சீரற்ற வானிலை பாதிப்பை கருத்திற் கொண்டு நேற்று முன்தினம் முதல் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு...

ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ
இலங்கை

மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநர் பதவியேற்பு!

ஜனாதிபதி செயலகத்தில், மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற சமூக மருத்துவ நிபுணர் ஹர்ஷ...

அகில விராஜ் காரியவசம் 2
இலங்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்!

  வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில் முன்னாள் அமைச்சர் அகில விராஜ்...

ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாள
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாளர்.

இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இன்று பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை கொழும்பில்...