24 660a270d3ed7e
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு வரவிருந்த கப்பலில் அபாயகரமான பொருட்கள்

Share

இலங்கைக்கு வரவிருந்த கப்பலில் அபாயகரமான பொருட்கள்

அமெரிக்காவில் (America) விபத்துக்குள்ளாகிய இலங்கைவந்த சிங்கப்பூர் (Singapore) சரக்குக் கப்பலில் 764 டொன் அபாயகரமான பொருட்களை இலங்கைக்கு ஏற்றிச் செல்ல முயற்சித்துள்ளதாக அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு சபை தகவல் வெளியிட்டுள்ளது.

குறித்த சரக்கு கப்பலானது, கடந்த மார்ச் 26ஆம் திகதியன்று அமெரிக்க பால்டிமோர் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் பெரும்பாலும் எரியக்கூடிய பொருட்கள், அபாயகரமான பொருட்கள், வெடிபொருட்கள் மற்றும் லித்தியம் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய 56 கொள்கலன்கள் ஏற்றப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், ஏனைய 4,644 கொள்கலன்களில் என்ன இருந்தது என்பது இன்னும் தெரிய வராதுள்ள நிலையில் இந்த கப்பலின் அடுத்த பயன திட்டமிடலானது கொழும்பிற்கே (Colombo) விடுக்கப்பட்டிருந்தது.

இதன்படி, தென்னாப்பிரிக்காவின் (South Africa) கேப் ஒஃப் குட் (Cape of Good) ஹோப்பைச் சுற்றி, 27 நாட்களை கடத்தி புத்தாண்டுக்குப் பின்னர் கப்பல் இலங்கையை அடைய திட்டமிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், விபத்து நடந்த இடத்திற்கு அருகிலுள்ள நீர்நிலைகள், சுழியோடிகள் பாதுகாப்பற்றவை என அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Share
தொடர்புடையது
25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...

000 86jq4zl
செய்திகள்இலங்கை

இலங்கையில் புதிய சூறாவளி வதந்தி பொய்: டிச. 4-5இல் லேசான மழைக்கே வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையில் வரும் நாட்களில் புதிய சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பரவி வரும் வதந்திகள் தவறானவை என்று...