24 6607dce9929f2
இலங்கைசெய்திகள்

தனியார் துறை ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

Share

தனியார் துறை ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் அமைச்சரவை முக்கிய தீர்மானங்களை எடுத்துள்ளது அரசாங்க ஊழியர்கள் சம்பள உயர்வைப் பெற்றுக் கொண்டிருக்கும் அதேவேளையில், தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியமும் உயர்த்தப்பட்டுள்ளது என்று வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மனுஷ நாணயக்கார(Manusha Nanayakkara) தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட் ஊதியம் 12,500 ரூபாவிலிருந்து 17,500 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த அதிகரிப்பு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட 3,500 ரூபாவை உள்ளடக்கியது, இதன் விளைவாக புதிய குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் 21,000 ரூபாவாகும். கூடுதலாக, ஊழியர்களின் EDF மற்றும் EPF பலன்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

பெருந்தோட்டத் தொழிலாளர்களும் தமது சம்பள உயர்வுக்கான கோரிக்கைகளை முன்வைத்துள்ளதையடுத்து ஜனாதிபதியின் தலையீட்டை விரைவுபடுத்தியுள்ளனர்.

தோட்டத் தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையில் சம்பள அதிகரிப்பு முன்மொழிவுகள் தொடர்பில் கருத்து வேறுபாடுகள் காணப்பட்ட போதிலும், இந்தக் கவலைகளை நிவர்த்தி செய்வதற்கு அமைச்சு தீவிரமாக செயற்பட்டு வருகின்றது என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
23858849 newproject 2025 12 28t112541304
செய்திகள்உலகம்

இனி வீட்டு வேலைகளுக்கு ‘ஹுமாயுனோய்டு’ ரோபோக்கள்: சிலிக்கான் வேலியில் தீவிரமடையும் தயாரிப்புப் பணிகள்!

வீட்டின் அனைத்து வேலைகளையும் செய்வதற்கான மனித ரொபோக்களை தயாரிக்கும் பணிகள் அமெரிக்காவின் சிலிக்கன் வெலி தொழில்நுட்ப...

24632725 china
செய்திகள்உலகம்

சீனாவில் களைகட்டிய உலக இந்தி தினம்: ஷாங்காய் இந்தியத் தூதரகத்தில் மாணவர்கள் உற்சாகப் பங்கேற்பு!

உலக இந்தி தினத்தை முன்னிட்டு சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள இந்தியத் தூதரகத்தில் விசேட கொண்டாட்டங்கள்...

kalvi L 260112092401000000
செய்திகள்உலகம்

தட்சசீலத்தில் 2,000 ஆண்டுகள் பழமையான குஷான கால நாணயங்கள் கண்டெடுப்பு: உலகளாவிய வணிக மையம் என்பது உறுதி!

பாகிஸ்தானின் வரலாற்றுச் சிறப்புமிக்க தட்சசீலம் (Taxila) பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில், 2,000 ஆண்டுகள் பழமையான குஷானப்...

26 69631f5fb34d5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தீவிரமடையும் வைரஸ் காய்ச்சல்: கொழும்பில் சிக்குன்குனியா; நாடு முழுவதும் டெங்கு அச்சம்!

இலங்கையில் தற்போது பல்வேறு வகையான வைரஸ் நோய்கள் வேகமாகப் பரவி வருவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனையின்...