tamilnaadi 154 scaled
இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவில் சட்ட விரோத வியாபாரத்தில் ஈடுபட்டவர் கைது

Share

முல்லைத்தீவில் சட்ட விரோத வியாபாரத்தில் ஈடுபட்டவர் கைது

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மன்னாகண்டல் பகுதியில் அனுமதியற்ற முறையில் 22 மிசில் லோட் மணல்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் முக்கிய மணல் ஏற்றும் வியாபாரி ஒருவரை ஒட்டுசுட்டான் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர் நேற்று(28.03.2024) மன்னாகண்டல் மற்றும் பேராற்று பகுதிகளில் இருந்து ஒரு இடத்தில் மணலினை சேகரித்து அதனை டிப்பரில் ஏற்ற முற்பட்ட வேளை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மற்றும் ஒருவர் தப்பி ஓடியுள்ளதோடு 22 மிசின் லோட் மணல்கள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதுடன் ஏற்ற முற்பட்ட டிப்பர் வாகனமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது கைதுசெய்யப்பட்ட நபரை பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளபோதும் சான்று பொருட்களையும் குறித்த நபர் அனுமதிப்பத்திரம் அற்ற நிலையில் மணல் ஏற்ற முற்பட்ட குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள இந்த வழக்கினை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் ஒட்டுசுட்டான் பொலிஸார் ஈடுபட்டுள்ளார்கள்.

கடந்த மாதம் முல்லைத்தீவு மாவட்ட செயலகம், சுற்றுச்சூழல் மற்றும் கனியவளத்திணைக்களத்தினால் பேராறு வசந்தபுரம் பகுதிகளில் வழங்கப்பட்ட மணல் அகழ்வு தொடர்பில் நேரடியாக களவிஜயம் மேற்கொண்டு அங்கு வழங்கப்பட்ட அனுமதிகள் இரத்து செய்யப்பட்ட நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
image 2025 12 02 093823108
இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவு கடற்படை வீரர்கள் விபத்து: காணாமல் போன 5 பேரில் ஒருவரின் உடலம் மீட்பு!

அதிதீவிர வானிலைக் காரணமாக முல்லைத்தீவு சாலை முகத்துவாரப் பகுதியில், மணலை அகற்றி விரிவுபடுத்தும் பணியின்போது, கடந்த...

IMG 4676
இலங்கைசெய்திகள்

லுணுவில ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு விடை: பட்டச் சான்றிதழ் பூதவுடலுக்கு சமர்ப்பிப்பு!

அண்மையில் லுணுவில பகுதியில் நிவாரணப் பணிக்காகச் சென்றபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்த இலங்கை விமானப்படையின் விங் கமாண்டர்...

25 68663a41415fd
இலங்கைசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் பேரிடர் நிர்வாகத்தை அரசாங்கம் ஆய்வு செய்ய வேண்டும்: நாமல் ராஜபக்ச!

பேரிடர் சூழ்நிலையை நிர்வகிக்க அரசாங்க இயந்திரம் இன்னும் தயாராக இல்லை என்று சுட்டிக்காட்டிய சிறிலங்கா பொதுஜன...

MediaFile 4
இலங்கைசெய்திகள்

வட்டியில்லா மாணவர் கடன்: விண்ணப்பக் காலக்கெடு டிசம்பர் 15 வரை நீடிப்பு!

வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 10வது கட்டத்திற்கான விண்ணப்பக் காலக்கெடு 2025.12.15 ஆம் திகதி வரை...