24 66076b876579e
இலங்கைசெய்திகள்

மரக்கறி மற்றும் மீன்களின் விலைகளில் மாற்றம்

Share

மரக்கறி மற்றும் மீன்களின் விலைகளில் மாற்றம்

பேலியகொட மெனிங் சந்தையில் மரக்கறிகளின் விலையில் நேற்று (29) கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பேலியகொட மெனிங் சந்தை பொது வர்த்தக சங்கத்தின் உப தலைவர் எச்.டி.என். சமரதுங்க தெரிவித்துள்ளார்.

மேலும், மரக்கறிகளின் விலை குறைந்துள்ளமையினால் வாடிக்கையாளர்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும், காய்கறிகளை விற்பனை செய்ய முடியாமல் சில வியாபாரிகள் தூக்கி எறிவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதன்படி, நேற்று ஒரு கிலோ முள்ளங்கி 40 ரூபாய்க்கும், கருவேப்பிலை கிலோ 40 ரூபாய்க்கும், புடலங்காய் கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனையாகியுள்ளது.

மேலும், வெங்காய இலை 80 ரூபாய், ஒரு கிலோ கத்தரிக்காய் 100 ரூபாய், மக்காச்சோளம் கிலோ 100 ரூபாய், கத்தரிக்காய் 100 ரூபாய், தக்காளி கிலோ 120, பூசணி 120 ரூபாய், போஞ்சி கிலோ 100, வெண்டைக்காய் கிலோ 140, கரட் 150, முட்டைகோஸ் கிலோ 150, பச்சை மிளகாய் கிலோ 150, ஒரு கிலோ மீன் மிளகாய் 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஒரு கிலோ வெள்ளரி 20 ரூபாய்க்கும், ஒரு கிலோ இஞ்சி 1300 ரூபாய்க்கும் விற்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று (29) பேலியகெட மீன்களின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக பேலியகொட மீன் சந்தை வர்த்தக நிலையத்தின் வர்த்தகர்கள் சங்கத்தின் செயலாளர் ஜெயந்த குரே தெரிவித்துள்ளார்.

பண்டிகைக்காலம் நெருங்கும் போது மீன்களின் விலை அதிகரிப்பது வழக்கம் என்றும் சாலயா மொத்த விற்பனை 550 ரூபாவாகவும், லின்னா 750 ரூபாவாகவும், ஹுருல்லா 750 ரூபாவாகவும், பலாயா 650 ரூபாவாகவும், கெலவல்லா 900 ரூபாவாகவும், தலபட் 1400 ரூபாவாகவும், பாராவோ 1400 ரூபாவாகவும், ஒரு கிலோ தோரா 1200 ரூபாவாகவும் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு கிலோ கும்பலாவ 800 ரூபாவுக்கும், இறால் கிலோ 2000 ரூபாவுக்கும், கணவாய் கிலோ 1200 ரூபாவுக்கும், விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...