24 66062e5a107da 1
இலங்கைசெய்திகள்

பசில் ராஜபக்சவை கடுமையாக சாடிய இராஜாங்க அமைச்சர்

Share

பசில் ராஜபக்சவை கடுமையாக சாடிய இராஜாங்க அமைச்சர்

எந்த தேர்தலை முதலில் நடத்த வேண்டும் என்பதை தீர்மானிப்பதற்கு பசில் ராஜபக்ச தேர்தல்கள் ஆணையாளரல்ல, அரசியலமைப்பின் பிரகாரம் முதலில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(28) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, அரசாங்கத்தை தற்போது பொறுப்பேற்க தயார் என குறிப்பிடும் தரப்பினர் 2022 ஆம் ஆண்டு ஓடி ஒளிந்ததை மறந்து விடக் கூடாது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை நாங்கள் தோற்றுவிப்போம்.அவரையே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம்.

ஐக்கிய மக்கள் சக்தியினரும் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவார்கள். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தில் நாடு பாரிய நெருக்கடிக்கடியில் இருந்து மீண்டுள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பற்றி பேசுவதற்கு ஒன்றுமில்லை.நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவே மைத்திரிபால சிறிசேன,ஜீ.எல்.பீரிஸ் ஆகியோரை தவறாக வழிநடத்தினார் என்பதை உறுதியாக குறிப்பிட முடியும் என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...