24 66063ebaca9d1
இலங்கைசெய்திகள்

கடந்த மாதம் நாட்டிற்கு கிடைத்துள்ள பல மில்லியன்

Share

கடந்த மாதம் நாட்டிற்கு கிடைத்துள்ள பல மில்லியன்

இலங்கையில் 2024 பெப்ரவரி மாதத்தில் தேங்காய் பால் ஏற்றுமதி மூலம் 2971 மில்லியன் வருமானம் ஈட்டப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை நேற்று (28.3.2024) தென்னை அபிவிருத்தி அதிகாரசபை (சி.டி.ஏ) வெளியிட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு பெப்ரவரியில் 4,366 மெட்ரிக் தொன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு ரூ. 2,401 மில்லியன் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி மாதாந்த அடிப்படையில் வெளியிட்டுள்ள ஏற்றுமதி அறிக்கையின்படி, 2024 பெப்ரவரியில் 6,739 மெற்றிக் தொன் தேங்காய்ப்பால் ஏற்றுமதியின் மூலம் ரூ. 2,971 மில்லியன் வருமானம் கிடைத்துள்ளது.

ஏற்றுமதி செய்யப்பட்ட தேங்காய்ப்பாலின் அளவைப் பொறுத்தவரை, 2023 ஆம் ஆண்டை விட 2024 பெப்ரவரியில் 2,373 மெட்ரிக் தொன்கள் அதிகரித்ததுடன், ஏற்றுமதி வருமானமும் ரூ. 570 மில்லியன் ஆக கூடியுள்ளது.

கடந்த ஆண்டு கடும் வறட்சியை தொடர்ந்து பெய்த மழையால் தேங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. மேலும், கடந்த நவம்பர் மாதம் முதல் தற்போது வரை ஒவ்வொரு மாதமும் தேங்காய் உற்பத்தி அதிகளவில் வளர்ச்சி கண்டு வருகிறது.

இலங்கையில் தேங்காய் உற்பத்தி 2023 நவம்பரில் 22 சதவீதமும், டிசம்பரில் 5 சதவீதமும், 2024 ஜனவரியில் 18 சதவீதமும், பெப்ரவரியில் 25 சதவீதமும் அதிகரித்துள்ளது.

2023 ஆம் ஆண்டில், தேங்காய்களின் மொத்த உற்பத்தி 3,000 மில்லியனைத் தாண்டும், மேலும் தொழிற்சாலைகளுக்கு ஒதுக்கப்பட்ட தேங்காய்களின் அளவு 1,380 மில்லியனாக இருக்கும்.

எவ்வாறாயினும், தேங்காய் ஏற்றுமதியின் வருமானம் இந்த வருடத்தில் முதன்முறையாக ஒரு பில்லியன் டொலர்களாக உயரும் என தென்னை அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...