24 6604fb55783c5
இலங்கைஉலகம்செய்திகள்

இலங்கை வரும் போது விபத்துக்குள்ளான கப்பல் தொடர்பில் தகவல்

Share

இலங்கை வரும் போது விபத்துக்குள்ளான கப்பல் தொடர்பில் தகவல்

அமெரிக்காவின் பெல்டிமோர் துறைமுகத்தில் இருந்து இலங்கை நோக்கி பயணித்த டாலி சரக்கு கப்பல் ஏற்கனவே பல விபத்துக்களை எதிர்கொண்ட கப்பல் என சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

2016 ஆம் ஆண்டில், பெல்ஜியத்தின் எண்ட்வெபர் துறைமுகத்திலிருந்து பிரேமாஹேவனுக்கு கப்பல் செல்லத் தொடங்கியபோது, ​​அது துறைமுகத்தின் தளத்தின் மீது மோதி பல மீட்டர் பகுதியை சேதப்படுத்தியது.

இது தவிர, 2018 ஆம் ஆண்டில் இருந்து மேலும் மூன்று விபத்துக்கள் நடந்துள்ளதென வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவில் பாலத்தில் மோதியதில் கப்பலில் நிரம்பியிருந்த 13 கொள்கலன்கள் சேதமடைந்ததாகவும், அபாயகரமான பொருட்கள் இருந்த கொள்கலன் கடலுக்குள் விழுந்துள்ளதா எனவும் அமெரிக்க கடலோர காவல்படை குழு ஆராய தொடங்கியுள்ளது.

கடலில் விழுந்த கொள்கலன்களில் அபாயகரமான பொருட்கள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

இந்த விபத்தின் பின்னர் அந்த கப்பலில் இருந்து சுமார் 1.8 மில்லியன் கேலன் டீசல் தண்ணீரில் கசியும் அபாயம் உள்ளதாகவும், அந்த அபாயம் குறித்து கடலோர காவல்படை குழு கவனம் செலுத்தியுள்ளதாகவும் அமெரிக்கா தகவல் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
MediaFile 11
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிராம அலுவலர் மீதான தாக்குதல் வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஆட்பிணையில் விடுதலை!

கிளிநொச்சி – பரந்தன் பகுதி கிராம அலுவலர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் வழக்கில், நாடாளுமன்ற...

images 6 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இயக்கச்சியில் விபத்து: மாற்றுத்திறனாளியை மோதிவிட்டுத் தப்பியோடிய வாகனம் – ஒருவர் படுகாயம்!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி பகுதியில், மாற்றுத்திறனாளி ஒருவரின் மோட்டார் வண்டியைப் பின்னால் இருந்து மோதி...

MediaFile 10 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ராஜகிரியவில் 300 புதிய வீட்டு அலகுகள்: தடைப்பட்டிருந்த திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி!

ராஜகிரிய, ஒபேசேகரபுர பகுதியில் நீண்டகாலமாகத் தடைப்பட்டிருந்த 300 வீட்டு அலகுகளை நிர்மாணிக்கும் பணிகளைப் புதிய ஒப்பந்தக்காரர்...

Dark AI e1756568647595
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெஹிவளை ஹோட்டல் உரிமையாளர் கொலை: AI தொழில்நுட்பத்தில் உருவான சந்தேக நபரின் புகைப்படம் வெளியீடு!

தெஹிவளை பகுதியில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாளம்...