24 6603f263187c2 1
சினிமாசெய்திகள்

பணத்திற்காக அட்ஜஸ்ட்மென்ட்.. கார்த்திகை தீபம் சீரியல் நடிகை அதிர்ச்சி பேச்சு

Share

பணத்திற்காக அட்ஜஸ்ட்மென்ட்.. கார்த்திகை தீபம் சீரியல் நடிகை அதிர்ச்சி பேச்சு

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் கதாநாயகியாக தீபா எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ஆர்த்திகா. இவர் சீரியல் மற்றும் சினிமாவில் இருக்கும் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

“அட்ஜஸ்ட்மென்ட் கேட்டு என்னிடம் வருபவர்களிடம், இப்போது தெரியாமல் வந்து கேட்டுடீங்க, இனிமேல் இப்படி என்னிடம் வந்து கேட்காதீங்க என்று வெளிப்படையாக கூறிவிடுவேன். ஏன் என்றால் சீரியல் மற்றும் சினிமா எனக்கு பெரிது கிடையாது. இந்த வேலை இல்லையென்றாலும், வேறு ஏதாவது ஒரு வேலைக்கு போய்விடுவேன்”.

“சினிமாவில் பெரிய இடத்திற்கு வர வேண்டும் என்பதற்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்து பிரபலமாகும் வாழ்க்கை எனக்கு தேவை இல்லை. கடவுள் எனக்கு கொடுத்து இருக்கும் இந்த வாழ்க்கையை நாம் மிகவும் மதிக்கிறேன். இந்த வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இருந்தாலே போதும், அதற்கு பணம் தேவையில்லை, பெயர் தேவையில்லை, நாம் நாமாகவே இருந்தால் மட்டுமே போதுமானது”.

“சினிமாவில் பல பெண்கள் பெயருக்காக, பணத்திற்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்கிறார்கள். அவர்கள் அப்படி செய்வதால் தான், மற்ற பெண்களை பார்க்கும் போதும் இவர்கள் அட்ஜஸ்ட்மென்ட் செய்வார்கள் என நினைத்து வந்து கேட்கிறார்கள். அப்படி கேட்பவர்களை நாம் தவறாக சொல்ல முடியாது”.

“அவர்களிடம் நாம் தெளிவாக சொல்லிவிட்டாலே போதும், அதே போல் எனக்கு கவர்ச்சியாக உடல் அணிய பிடிக்காது. இதனால் நான் முன்பே எல்லாத்தையும் கூறிவிடுவேன். அதற்காக பணம் குறைவாக கிடைத்தாலும், அதை பற்றி எனக்கு கவலை இல்லை” என கூறினார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 47
செய்திகள்இந்தியா

டெல்லி AI உச்சி மாநாடு: கடைசி நேரத்தில் பின்வாங்கிய பில் கேட்ஸ்! – எப்ஸ்டீன் விவகார சர்ச்சை காரணமா?

டெல்லியில் நடைபெற்று வரும் ‘இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில்’ (India AI Impact...

image 1200x800 45
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் அதிரடி! – ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது; எப்ஸ்டீன் விவகாரத்தில் அரசு ரகசியங்களை கசியவிட்டாரா?

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் மற்றும் பொது அலுவலகத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக எழுந்த...

image 1200x800 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை மீண்டும்? – 310 மீட்டர் நீளத்தில் புதிய இறங்குதுறை அமைக்கத் திட்டம்!

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமன்னார் இறங்குதுறையை (Jetty) நவீனமயமாக்குவதற்கான முதற்கட்ட மேம்பாட்டுத் திட்டம்...