24 66022fe82a0b7
இலங்கைசெய்திகள்

வயதான நபருக்கு இளைஞன் கொடுத்த அதிர்ச்சி

Share

வயதான நபருக்கு இளைஞன் கொடுத்த அதிர்ச்சி

புத்தளம், மாதம்பே பிரதேசத்தில் வயதானவரின் வங்கி அட்டையை திருடி 80 ஆயிரம் ரூபாய் பணம் பெற்ற பேரனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

திருடிய பணத்தில் தனது மோட்டார் சைக்கிளை திருத்தியதாக கூறப்படும் 22 வயதுடைய இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பேரன் நான்கு முறை வங்கி அட்டையில் இருந்து இதுபோன்ற பணத்தை எடுத்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த தாத்தா பல வருடங்களாக கூலி வேலை செய்து சில வருடங்களுக்கு முன் ஓய்வு பெற்றவர், அங்கு ஊழியர் நலன்புரி பணமாக 2 லட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டார்.

அவற்றை வங்கியில் வைப்பு செய்துவிட்டு மனைவியுடன் வசித்து வந்துள்ளார். கடந்த வாரம் ஒருநாள் அவரது மனைவிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

அவரது சிகிச்சைக்குத் தேவையான பணத்தைப் பெறுவதற்காக வங்கி அட்டையைப் பயன்படுத்தி பணத்தை எடுக்கச் சென்றபோது அவருக்குத் தெரியாமல் வங்கிக் கணக்கில் இருந்து 82000 ரூபாய் குறைந்துள்ளமை உறுதி செய்துள்ளார்.

அதற்கமைய, பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்ற அவர் முதற்கட்ட விசாரணையில் சந்தேகத்தின் பேரில் பேரனை கைது செய்து அவரிடம் நடத்திய விசாரணையில் அனைத்தும் தெரியவந்துள்ளது.

அதற்கமைய, சந்தேகநபரை பெல்மடுல்ல நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
image 870x 696c94f879728
செய்திகள்உலகம்

கிரீன்லாந்து விவகாரம்: ட்ரம்ப்பின் முடிவு ஏற்றுக்கொள்ள முடியாதது – போர்க்கொடி தூக்கும் ஐரோப்பியத் தலைவர்கள்!

கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்கும் முயற்சியில், அதற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் எட்டு ஐரோப்பிய நாடுகள் மீது அமெரிக்க...

MediaFile 10
செய்திகள்அரசியல்இலங்கை

எம்.பி.க்களின் ஓய்வூதிய ரத்து சட்டமூலத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ரத்து செய்வதற்காக அரசாங்கத்தால் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு எதிராக முன்னாள் நாடாளுமன்ற...

IMG 1275
செய்திகள்இலங்கை

உயர்தரப் பரீட்சை நடைபெறும் போது அரசியல் அதிரடி: தம்புத்தேகமவில் மாணவர்களுக்குப் பெரும் இடையூறு!

தம்புத்தேகம நகரில் நேற்று (17) நடைபெற்ற சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) அரசியல் கூட்டத்தினால் ஏற்பட்ட...

198399 yjkrdilbjr 1707748418
செய்திகள்இலங்கை

ரணில் விக்கிரமசிங்க மீதான நிதி மோசடி வழக்கு: மன்றாடியார் நாயகத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க லண்டன் சென்றபோது அரச நிதியை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாகக் கூறப்படும்...