24 66010d346fe44
உலகம்செய்திகள்

137 பள்ளி குழந்தைகள் விடுதலை! நைஜீரியாவை புரட்டி போட்ட கடத்தல் சம்பவம்

Share

137 பள்ளி குழந்தைகள் விடுதலை! நைஜீரியாவை புரட்டி போட்ட கடத்தல் சம்பவம்

நைஜீரியாவில் துப்பாக்கி ஏந்திய கும்பலால் கடத்தப்பட்ட 137 பள்ளி குழந்தைகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வடமேற்கு நைஜீரியாவில் கடந்த மார்ச் 7 ஆம் தேதி கடூனா(Kaduna) மாநிலத்தின் குரிகா (Kuriga) நகரில் இருந்து குறைந்தது 137 பள்ளி சிறுவர்கள் துப்பாக்கி ஏந்திய கும்பலால் கடத்தப்பட்டனர்.

இந்த குழந்தைகள் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கும் மேலாக கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் வடமேற்கு நைஜீரியாவில் துப்பாக்கி ஏந்திய கும்பலால் கடத்தப்பட்ட 137 பள்ளி குழந்தைகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குழந்தைகள் விடுதலை மகிழ்ச்சிக்குரிய விஷயமாக இருந்தாலும், இந்த கொடுமை அவர்களுக்கு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

விடுவிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அவர்களின் அனுபவத்தின் தாக்கத்தை எதிர்கொள்ள உதவும் வகையில் “மன சமூக ஆலோசனை” வழங்கப்படுவதாக அரசு அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார்.

பள்ளி குழந்தைகளை குறிவைத்த இந்த கடத்தல் நிகழ்வு நைஜீரியாவில் தேசிய அளவில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு நாட்டில் நடந்த முதல் பள்ளி குழந்தைகள் கடத்தல் இதுவாகும்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 6
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணம், வளலாய் கடற்கரையில் பௌத்த சிலை கரையொதுங்கியது – மியன்மாரிலிருந்து வந்திருக்கலாம் என சந்தேகம்!

யாழ்ப்பாணம், வளலாய் பகுதி கடற்கரையில் இன்றைய தினம் (நவம்பர் 17) பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை...

25 6918218c86028
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டுப் பெண்ணிடம் அநாகரீகமாக நடந்த இளைஞன் எதிர்வரும் நவம்பர் 28 வரை விளக்கமறியலில்!

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பிரதேசத்தில் வெளிநாட்டு யுவதி ஒருவருக்குப் பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படும் சம்பவம்...

25 68f5630be3ac6
செய்திகள்இலங்கை

இலங்கைச் சிறைச்சாலைகளில் கட்டுக்கடங்காத நெரிசல்: 37,000 கைதிகள் அடைப்பு – ‘500 பேர் நின்று உறங்குகிறார்கள்’ எனப் பாராளுமன்றில் அம்பலம்!

இலங்கைச் சிறைச்சாலைகளில் நிலவும் கட்டுக்கடங்காத நெரிசல் மற்றும் அதன் காரணமாகக் கைதிகள் எதிர்கொள்ளும் மனிதநேயமற்ற நிலைமைகள்...

Election Commission 1
இலங்கைஅரசியல்செய்திகள்

வாக்காளர் பட்டியல் திருத்தம் 2025: தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக ஆரம்பம் – பெயர் சேர்க்க ஊடகங்களுக்கு நேரடிப் பொறுப்பு!

2025ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தப் பணிகளைத் (Voter Register Revision) தேர்தல்கள் ஆணைக்குழு...