24 6600cbeb53f23
இலங்கைசெய்திகள்

ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியர்கள் மீண்டும் சேவையில் இணைப்பு

Share

ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியர்கள் மீண்டும் சேவையில் இணைப்பு

ஓய்வு பெற்றுக்கொண்ட ஆங்கில பாட ஆசிரியர்கள் மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர்.

நாட்டில் நிலவி வரும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு காணும் நோக்கில் இவ்வாறு ஓய்வு பெற்றுக்கொண்ட ஆசிரியர்கள் மீளவும் கடமையில் இணைத்துக்கொள்ளப்பட உள்ளனர்.

தரம் 6 முதல் தரம் 11 வரையிலான மாணவர்களுக்கு கற்பிக்கும் நோக்கில் ஓய்வு பெற்றுக்கொண்ட ஆங்கில பாட ஆசிரியர்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட உள்ளனர்.

ஆசிரியர்களை நியமிக்கும் நோக்கில் தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆசிரியர்களை நியமிப்பது தொடர்பிலான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெற்றுக்கொள்ளப்படும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

ஓய்வு பெற்றுக்கொண்ட போது செலுத்தப்பட்ட சம்பளத்திற்கு மேலதிகமாக இவர்களுக்கு வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு வழங்கப்பட வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் மே மாதம் சாதாரண தரப் பரீட்சைக்கு முன்னதாக இந்த ஆங்கில பாட ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் மேல் மாகாணத்தில் இணைத்துக்கொள்ளப்பட உள்ள பட்டதாரி ஆசிரியர்களின் எண்ணிக்கை ஐயாயிரமாக அதிகரிக்கப்பட உள்ளது.

Share
தொடர்புடையது
Screenshot 2025 12 22 110737 1170x800 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைக்கவசம் இன்றி அதிவேகப் பயணம்: மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து – வாலிபர் பலி, சிறுவன் உட்பட நால்வர் காயம்!

யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர்...

IMG 2581 1170x658 1
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி எங்கள் சொத்து; விகாரையை அகற்று – யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கண்டனப் போராட்டம்!

யாழ்ப்பாணம், தையிட்டிப் பகுதியில் அமையப்பெற்றுள்ள விகாரையை அகற்றக் கோரியும், அங்கு இடம்பெறும் நில ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகவும்...

images 2 7
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் ஏற்றுமதித் துறையில் பாரிய வளர்ச்சி: 11 மாதங்களில் 15,776 மில்லியன் டொலர் வருமானம்!

இலங்கையின் ஏற்றுமதித் துறை 2025 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் (ஜனவரி – நவம்பர்)...

603890102 1355544646614961 2421916803890790440 n
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறை கடற்கரையில் இரு பெரிய கடல் ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுக்கம்!

அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை மற்றும் கல்முனை இடைப்பட்ட கடற்கரைப் பகுதிகளில் இன்று (22) மதியம் இரண்டு...