4 14 scaled
சினிமாசெய்திகள்

’ரமணா’ லொகேஷனில் ‘எஸ்கே 23’.. 23 வருடங்களுக்கு பின் நடக்கும் மேஜிக்.. ஏஆர். முருகதாஸ் நெகிழ்ச்சி..!

Share

தமிழ்த் திரையுலகில் ஏராளமான பிளாக்பஸ்டர் படங்களை வழங்கிய ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், டாப் லீக் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஆக்‌ஷன் படம் ஒன்று தயாராகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ஸ்ரீ லக்ஷ்மி மூவீஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்திற்கு, கோலிவுட்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

இவருக்கு ஜோடியாக கன்னட நடிகை ருக்மணி வசந்த் இணைந்துள்ளார். அவர் ஏற்கனவே தென்னிந்தியா முழுவதும் இளைஞர்களின் இதயங்களை வென்ற ஒருவராக காணப்படுகிறார்.

ஸ்ரீ லக்ஷ்மி மூவிஸ் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வரும் நிலையில், இதற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த நிலையில், எஸ்கே படம் குறித்த அப்டேட் ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டு உள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்.

குறித்த புகைப்படம், மறைந்த நடிகர் விஜயகாந்தை வைத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய ‘ரமணா’ திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு முக்கியமான காட்சியில், விஜயகாந்த் தனது பழைய மாணவர்களை சந்திப்பார். அந்த காட்சி எடுக்கப்பட்ட  ரயில் நிலையத்தில் தான் தற்போது முருகதாஸ் எஸ்கே படப்பிடிப்பிற்காக சென்றுள்ளார்.

மேலும் ஏ.ஆர். முருகதாஸ் பதிவில், 23 ஆண்டுகளுக்கு பிறகு SK உடன் SKxARM படப்பிடிப்பிற்காக எனது ‘ரமணா’ படத்தின் சின்னமான இடத்திற்குத் திரும்புகிறேன். எல்லாம் தொடங்கிய இடத்திற்கே மீண்டும் திரும்பியிருப்பது மிக யதார்த்தமாக உள்ளது என உணர்ச்சிவசமாக கூறியுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 3
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கிண்ணம்: பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா! – 61 ஓட்டங்களால் அபார வெற்றி!

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் போட்டியில், பரம எதிரிகளான இந்தியா மற்றும்...

25 688daecf5398b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நாளை நீதிமன்றப் பணிகள் முடக்கம்! – சட்டத்தரணி படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு!

பத்தரமுல்ல, அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை...

Screenshot 2026 02 15 222008
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றவாளிகளுக்குத் தடை! – புதிய தரவுத்தளம் மூலம் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள், சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய எந்தவொரு பணிகளிலும் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான புதிய...

Screenshot 2026 02 15 222512
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் முதல்முறை: காசல் வீதி மருத்துவமனையில் இலவச IVF சிகிச்சை! – 2,000-க்கும் மேற்பட்ட தம்பதியினர் விண்ணப்பம்!

கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள முற்றுமுழுதான இலவச செயற்கை கருத்தரிப்பு (IVF) சிகிச்சைக்காக...