24 65ff36354be1c
உலகம்செய்திகள்

ரஷ்யாவையே அதிர வைத்த தாக்குதல்..’தேசிய துக்க தினம்’ என அறிவித்த புடின்

Share

ரஷ்யாவையே அதிர வைத்த தாக்குதல்..’தேசிய துக்க தினம்’ என அறிவித்த புடின்

மாஸ்கோவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இறப்பு எண்ணிக்கை 133 ஆக உயர்ந்துள்ளது.

ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் உள்ள கச்சேரி அரங்கில் நடத்தப்பட்ட தாக்குதல் நாட்டையே நடுங்க வைத்தது.

இச்சம்பவத்தில் 40 பேர் கொல்லப்பட்டதாக முதலில் தெரிய வந்தது. அதன் பின்னர் பலி எண்ணிக்கை 120 ஆக உயர்ந்தது.

இந்த நிலையில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 133 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இதுதொடர்பில் கைது செய்யப்பட்ட 11 பேரில், நான்கு சந்தேக நபர்கள் வெளிநாட்டு குடிமக்கள் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Krasnogorsk-வில் உள்ள ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் இச்சம்பவத்தை ”கொடூரமான மற்றும் கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதல்” என கடுமையாக கண்டித்தது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) தனது உரையில், கொடூர சம்பவத்தை ”காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத செயல்” என்று குறிப்பிட்டதுடன், ‘தேசிய துக்க தினம்’ என அறிவித்துள்ளார்.

இதற்கிடையில் துணைப் பிரதமர் டாட்டியானா கோலிகோவா (Tatyana Golikova) கூறுகையில், மருத்துவ நிறுவனங்களில் 107 நோயாளிகள் உள்ளனர். அவர்களில் 3 குழந்தைகள், அதில் ஒரு குழந்தை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது என்றார்.

Share

Recent Posts

தொடர்புடையது
62a15150 5261 11f0 a2ff 17a82c2e8bc4.jpg
செய்திகள்உலகம்

வரலாறு படைத்த ஜோஹ்ரான் மம்தானி: நியூயார்க் நகரின் முதல் முஸ்லிம் மற்றும் இளம் மேயராகத் தேர்வு!

அமெரிக்காவின் நியூயோர்க் நகர மேயராக இருந்தவர் எரிக் ஆடம்ஸ். இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டு...

11ad0a96d3aaa13d73a54e4883f2f59c
உலகம்செய்திகள்

கென்டகி விமான நிலையத்தில் கோர விபத்து: சரக்கு விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்தது – 3 பேர் பலி!

அமெரிக்காவின் கென்டகி மாகாணம், லுயிஸ்விலா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஹவாய் மாகாணம் ஹொனொலுலு நகருக்கு...

23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...