24 65fd50b44c7a3
இலங்கைசெய்திகள்

9 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானம்

Share

9 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானம்

நாட்டில் 9 அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களுக்கான விலைகளை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, வாடிக்கையாளர்கள் இந்த தயாரிப்புகளை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி விலை குறைப்பு செய்யப்படவுள்ள 9 பொருட்களின் புதிய விலைகள் பின்வருமாறு அமைகின்றன.

ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயம் 100 ரூபாவினால் குறைக்கப்பட்டு 550 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும்.

சிவப்பு கௌபி ஒரு கிலோ கிராம் 52 ரூபாவினால் குறைக்கப்பட்டு 998 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

1150 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் வெள்ளை கௌபி 50 ரூபா குறைக்கப்பட்டு 1100 ரூபாவிற்கு விற்கப்படும்.

பாஸ்மதி அரிசி 20 ஒரு கிலோ கிராம் 20 ரூபா குறைக்கப்பட்டு 650 ரூபாவாக விற்பனை செய்யப்படும்.

சிவப்பு வெங்காயம் 10 ரூபா குறைக்கப்பட்டு புதிய விலையாக 350 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வெள்ளை பெரிய வெங்காய ஒரு கிலோ கிராம் 05 ரூபா குறைக்கப்பட்டு 265 ரூபாவிற்கு விற்கப்படவுள்ளது.

சிவப்பு சீனி ஒரு கிலோ கிராம் 430 ரூபாவிலிருந்து 425 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

சோயா ஒரு கிலோ கிராம் 5 ரூபா குறைக்கப்பட்டு 595 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும்.

170 ரூபாவாக இருந்த ஒரு கிலோ கிராம் சிவப்பரிசி 2 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
அருந்திக பெர்னாண்டோ
இலங்கை

CCIB இல் இருந்து வெளியேறினார் முன்னாள் அமைச்சர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகி இருந்தார். டுபாயிலிருந்து...

மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ
இலங்கை

ராஜபக்சர்களின் மற்றுமொரு சகா உயிரிழப்பு – நீளும் மர்மங்கள்!

  நேற்றைய தினம், ராஜபக்சர்களின் மிகவும் நெருக்கமான அரசியல்வாதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில்...

Namal
இலங்கை

மீண்டும் உருவாகும் ராஜபக்சர்கள் யுகம் – பொதுவெளியில் முழங்கிய இந்திக அனுருத்த!

  ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை மீண்டும் தோற்றுவிக்க இலங்கை மக்கள் தயாராகியுள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின்...

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...