24 65fcff0d4c80b
இலங்கைசெய்திகள்

இலங்கையர்கள் படுகொலை விவகாரம்: கனடிய ஊடகங்களை பாராட்டிய ஹரீன்

Share

இலங்கையர்கள் படுகொலை விவகாரம்: கனடிய ஊடகங்களை பாராட்டிய ஹரீன்

கனடாவில் இயங்கி வரும் ஊடகங்கள் மிகவும் ஒழுக்கநெறியுடன் செயற்பட்டு வருவதாக சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அண்மையில் இலங்கைக் குடும்பம் ஒன்று கனடாவின் ஒட்டாவாவில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றில் அவர் கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்த சம்பவத்தில் நான்கு சிறுவர்கள் உள்ளிட்ட ஆறு இலங்கையர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

கூரிய ஆயுதங்களின் மூலம் 19 வயதான இலங்கை இளைஞரின் தாக்குதலுக்கு இலக்காகி இவர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

குறித்த சம்பவம் இடம்பெற்ற போது கனடிய ஊடகங்கள் உயிரிழந்தவர்களின் புகைப்படங்களை பிரச்சாரம் செய்து குடும்பங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சம்பவம் இடம்பெற்ற போது ஒரேயொரு குடும்ப புகைப்படம் மட்டுமே சில ஊடகங்கள் பயன்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் இலங்கையில் இவ்வாறான ஓர் சந்தர்ப்பம் இடம்பெற்றிருந்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களையும் அம்பலப்படுத்தி அவர்களுக்கு பெரும் அசௌகரியம் ஏற்படுத்தப்பட்டிருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான ஊடக ஒழுக்கநெறி மீறல்களை வரையறுக்கும் நோக்கில் அரசாங்கம் இணைய பாதுகாப்பு சட்டத்தை அறிமுகம் செய்தது என அவர் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் கிரிக்கட் வீரர் தனுஷ்க குணதிலக்க பாலியல் குற்றச் செயல் சர்ச்சையில் சிக்கிய போதும் அந்நாட்டு ஊடகங்களில் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட பெண் பற்றிய புகைப்படங்களை வெளியிடவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...