2 12 scaled
சினிமாசெய்திகள்

ஏற்கனவே ‘இளையராஜா’ பயோபிக் வந்துருச்சே.. நெட்டிசன்கள் தரும் ஆச்சரிய தகவல்கள்..

Share

ஏற்கனவே ‘இளையராஜா’ பயோபிக் வந்துருச்சே.. நெட்டிசன்கள் தரும் ஆச்சரிய தகவல்கள்..

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் ஆன ’இளையராஜா’ என்ற படத்தின் அறிவிப்பு நேற்று வெளியானது என்பதும் நேற்று வெளியான இந்த படத்தின் போஸ்டர் இணையத்தில் வைரலானது என்பதையும் பார்த்தோம்.

இளையராஜாவின் கேரக்டரில் தனுஷ் நடிக்க இருக்கும் நிலையில் இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்க இருக்கிறார் என்பதும் இந்த படத்தின் தொடக்க விழாவில் பாரதிராஜா, கமல்ஹாசன் உள்ளிட்ட ஒருசிலர் வருகை தந்து படக்குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர் என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படம் குறித்த தகவல்கள் இணையத்தில் டிரெண்ட் ஆகி வரும் நிலையில் ஏற்கனவே இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் வந்துவிட்டது என நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர். நெட்டிசன்கள் பதிவு செய்யும் அந்த படம் தான் எஸ்.ஜே.சூர்யா நடித்து, இயக்கிய ’இசை’ என்ற படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் ஒரு இசை கலைஞன் உச்சத்தில் இருக்கும்போது திடீரென அந்த இசை கலைஞனை வீழ்த்துவதற்கு இன்னொரு இசைக்கலைஞர் சதி செய்வதும் அந்த சதியால் அவர் வீழ்ந்தபின் அவர் மீண்டும் எப்படி மீண்டு இருக்கிறார் என்பதுதான் கதை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் திரையரங்குகளில் வெளியான போது இசைஞானி இளையராஜா மற்றும் ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரகுமான் இடையே நடந்த மறைமுகமான மோதல் தான் இந்த படத்தின் கதை என்று கூறப்பட்டது. எனவே இந்த படத்தையே இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு என எடுத்து கொள்ளலாம் என்பதே நெட்டிசன்களின் பதிவாக உள்ளது.

இந்த படத்திற்கு இசையமைக்க ஏ ஆர் ரகுமானிடம் எஸ் ஜே சூர்யா சென்றபோது இந்த படத்தின் கதையை கேட்டு தன்னுடைய கதை போல் இருக்கிறது என்பதால் இந்த படத்திற்கு இசையமைக்க முடியாது என்று அவர் கூறிவிட்டதாகவும் அதன் பிறகு தான் எஸ்ஏ சூர்யாவே இந்த படத்திற்கு இசையமைத்ததாகவும் கூறப்பட்டது.

எனவே ’இசை’ படம் தான் இளையராஜாவின் முதல் வாழ்க்கை வரலாறு திரைப்படம் என்றும் அப்படி இருக்க மீண்டும் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்தை எதற்கு மீண்டும் எடுக்கிறார்கள் என்றும் நெட்டிசன்கள் கேலியாக பதிவு செய்து வருகின்றனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
1722136783 24 664a5be3012cc
செய்திகள்இலங்கை

நாடளாவிய ரீதியில் நீதிமன்றங்கள் முடக்கம்! – 3,500 சட்டத்தரணிகள் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டம்; அரசாங்கத்திற்கு கடும் எச்சரிக்கை!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் மிலேச்சத்தனமாகச் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில்,...

image 1200x800 7
செய்திகள்இந்தியா

இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குக! – பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவசரக் கடிதம்!

தமிழ்நாட்டிலுள்ள முகாம்களிலும், வெளியேயும் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக்...

image 1200x800 6
உலகம்செய்திகள்

அமெரிக்கா எங்களை வற்புறுத்துகிறது! – முனிச் மாநாட்டில் ட்ரம்ப் நிர்வாகம் மீது ஜெலன்ஸ்கி பகிரங்கக் குற்றச்சாட்டு!

ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய உக்ரைன் அதிபர் வோலோடிமிர்...

image 1200x800 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டாரவளை கற்குவாரி அனர்த்தம்: இராணுவத்தின் தீவிர தேடுதலில் இரு சடலங்கள் மீட்பு!

பண்டாரவளை, லியன்கஹவெல பகுதியில் உள்ள கற்குவாரி ஒன்றில் கடந்த 14-ஆம் திகதி ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தில்...