tamilnih 22
உலகம்செய்திகள்

பதவி விலகுவதாக அதிரடியாக அறிவித்த இந்திய வம்சாவளி பிரதமர்

Share

அயர்லாந்து பிரதமர் லியோ வரத்கர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

அயர்லாந்து நாட்டின் முதல் ஓரினச் சேர்க்கையாளர் பிரதம மந்திரி லியோ வரத்கர் (Leo Varadkar) ஆவார்.

இந்திய வம்சாவளியான இவர் 2017 மற்றும் 2020க்கு இடைப்பட்ட காலம் என இருமுறை பிரதமராக பதவி வகிக்கிறார்.

ஓரினச்சேர்க்கை திருமணத்தை சட்டப்பூர்வமாக்குவதற்கான பிரச்சாரங்களில் முக்கிய பங்கு வகித்த இவை, 2018யில் வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்ட கருக்கலைப்பு மீதான தடையை ரத்து செய்தார்.

இந்த நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்வதாக லியோ வரத்கர் அறிவித்துள்ளார். ”நான் பிரதமர் மற்றும் Fine Gael தலைமைப் பதவியை ராஜினாமா செய்கிறேன்” என செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

மேலும் இதுகுறித்து வெளியிட்ட தனது அறிக்கையில், ‘நம் நாட்டை மிகவும் சமமான மற்றும் நவீனமான இடமாக மாற்றியதில் நான் பெருமைப்படுகிறேன். இப்போது பதவி விலகுவதற்கான எனது காரணங்கள் தனிப்பட்ட மற்றும் அரசியல். எனக்கு வேறு எதுவும் வரிசையாக இல்லை, என் மனதில் எதுவும் இல்லை. என்னிடம் திட்டவட்டமான தனிப்பட்ட அல்லது அரசியல் திட்டங்கள் எதுவும் இல்லை’ என தெரிவித்துள்ளார்.

அத்துடன் பாராளுமன்றத்தின் ஈஸ்டர் இடைவேளைக்குப் பின்னர் புதிய பிரதமரை தெரிவு செய்ய அனுமதிக்கும் வகையில், ஏப்ரல் 6ஆம் திகதி கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டதாகவும் அவர் கூறினார்.

தனது கட்சியின் அடுத்த தலைவர் தெரிவு செய்யப்பட்ட பின்னர் பிரதமர் பதவியில் இருந்து விலக உள்ளார் லியோ வரத்கர். 45 வயதாகும் லியோ வரத்கர் 2017யில் முதல் முறையாக பிரதமரானபோது, நாட்டின் மிக இளம் வயது பிரதமராக இருந்தார்.

Share
தொடர்புடையது
world 86
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பூசா சிறையில் கொலைச் சதி? மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை!

பரத லக்ஷ்மன் பிரேமச்சந்திராவின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பூசா உயர் பாதுகாப்புச் சிறையில்...

world 85
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபாயகரமான வாகன ஓட்டுநர்களைப் பிடிக்க புதிய வாட்ஸ்அப் எண்: வீடியோ ஆதாரங்களை அனுப்பக் காவல்துறை வேண்டுகோள்!

இலங்கையில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்தவும், பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக உடனடி...

world 84
செய்திகள்உலகம்

இஸ்லாமாபாத்தில் சரித்திர முக்கியத்துவமிக்க பேச்சுவார்த்தை: ஜே.டி. வேன்ஸ் மற்றும் ஈரானியக் குழுவினரைச் சந்தித்தார் ஷெபாஸ் ஷெரீப்!

மத்திய கிழக்கில் கடந்த பெப்ரவரி 28 முதல் நீடித்து வரும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு...

world 83
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைக்குக் கடந்த மார்ச் மாதத்தில் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் அதிகரிப்பு!

இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2026 மார்ச் மாதத்தில் புலம்பெயர்...