24 65fbbbcad0380
உலகம்செய்திகள்

தெருவில் சிதறிக்கிடக்கும் சடலங்கள்… தூதரகங்களில் ஊழியர்கள் வெளியேற்றம் : பற்றியெரியும் நாடு

Share

ஹைதி நாட்டில் தொடரும் வன்முறை மற்றும் பெரும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களுக்கு மத்தியில், தெருவெங்கும் சடலங்கள் சிதறிக்கிடப்பதாகவும் பல நாடுகள் தங்கள் தூதர அதிகாரிகளை வெளியேற்றி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் இருந்து 600 மைல்கள் தொலைவில் அமைந்துள்ள ஹைதி நாடு, உள்நாட்டு மோதல்களால் மொத்தமாக சிதைந்து வருகிறது. வட அமெரிக்காவின் சோமாலியா என குறிப்பிடும் அளவுக்கு அங்கே நிலைமை மோசமடைந்துள்ளது.

ஹைதியின் பேரழிவை தடுக்க தாமதித்தால், பெருந்திரளான அகதிகள் படையெடுப்பை எதிர்கொள்ள நேரிடும் என்றும் நிபுணர்கள் பலர் எச்சரிக்கை விடுக்கத் தொடங்கியுள்ளனர்.

பல்வேறு உயர்தர ஹொட்டல்கள் மற்றும் குறைந்தது ஒரு டசின் தூதரங்கள், தங்கள் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை நாட்டைவிட்டு வெளியேற்றி வருகின்றனர். பிரதமர் Ariel Henry பதவி விலக கடந்த வாரமே ஒப்புக்கொண்ட பின்னரும் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது.

இதனிடையே அண்டை நாடுகள் தங்கள் எல்லை பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளன. வெளிநாட்டவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை தூதரகங்கள் தீவிரப்படுத்தியுள்ளன.

ஐரோப்பிய ஒன்றியம், உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர்கள் உட்பட 300 பேரை வெளியேற்றியதாக செவ்வாயன்று, டொமினிகன் குடியரசு தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

ஹைதி விமான நிலையம் மூடப்பட்டுள்ள நிலையில், ஹெலிகொப்டர்களை பயன்படுத்தி தங்கள் குடிமக்களை வெளியேற்றி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஹைதியில் இருந்து நூறாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

மட்டுமின்றி பலாத்காரம், தீவைப்பு மற்றும் பணத்திற்காக ஆட்கடத்தல்கள் உள்ளிட்ட கொடூர சம்பவங்களும் அரங்கேறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் கூறபப்டுகிறது.

உணவுப் பொருட்களின் விலை தாறுமாறாக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளில் ரத்தம், ஆக்சிஜன் உட்பட அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
image 1200x800 14 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட கொலை வழக்கு: சந்தேகநபர்களுக்குத் தடுப்புக்காவல்! – நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள் நீதிமன்றில் திரண்டனர்!

சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட...

images 1 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு: இரு பொலிஸ் அதிகாரிகள் கைது! – தலைமையகம் அதிரடி நடவடிக்கை!

கொழும்பு, ஜிந்துபிட்டி பகுதியில் கடந்த சனிக்கிழமை (14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது, தமது...

image 1200x800 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீகிரியாவில் சோகம்: காட்டு யானை தாக்கியதில் ஹங்கேரி நாட்டுச் சுற்றுலாப் பயணி பலி!

இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலமான சீகிரியா மற்றும் பிதுரங்கலை மலைக்கு இடைப்பட்ட காட்டுப்பகுதியில், காட்டு...

image 1200x800 35
செய்திகள்இலங்கை

ஓய்வுக்காலத்தின் சொர்க்கபுரி இலங்கை! – 2026-இல் உலகின் மிக மலிவான நாடாக முதலிடம்; ‘Travel + Leisure’ புகழாரம்!

உலகின் முன்னணி பயண மற்றும் வாழ்க்கைமுறை சஞ்சிகையான ‘Travel + Leisure’, 2026-ஆம் ஆண்டில் ஓய்வுபெற்ற...