10 8 scaled
இலங்கைசெய்திகள்

யாழ். மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Share

யாழ். மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வட மாகாணத்தில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை வெப்பநிலை உயர்வாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக யாழ். பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

கடும் வெப்பநிலையால் யாழ். மாவட்டத்தில் தரைக்கீழ் நீரின் அளவு சடுதியாக குறைவடைந்து செல்வதால் மக்கள் நீரைச் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, எதிர்வரும் ஏப்ரல், மே, ஜுன், மற்றும் ஜூலை மாதங்களில் வெப்பநிலை தற்போது உள்ளதை விடவும் உயர்வாக இருக்கும்.

வடக்கு மாகாணத்தின் பல இடங்களில் நேற்றைய தினம் அதி கூடிய வெப்பநிலை 36 பாகை செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது.

உணரக்கூடிய வெப்பநிலை 34 பாகை செல்சியஸ் ஆக இருந்துள்ளது. இந்த நிலைமை அடுத்து வரும் நாட்களில் இன்னமும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை வடக்கு மாகாணத்தின் சராசரி ஆவியாக்க அளவு 11 மில்லிமீற்றர் ஆகும். சில இடங்களில் சராசரியை விட மிக உயர்வாக பதிவாகியுள்ளது. எனவே ஒரு நாளின் ஆவியாக்க அளவே, 11 மில்லிமீற்றர் என்றால் ஒரு மாதத்தின் 30 நாளுக்கான ஆவியாக்க அளவு 330 மில்லிமீற்றர் ஆகும்.

இதேவேளை இவ்வாண்டு மார்ச் மாதம் இதுவரை 1 மில்லிமீற்றர் மழை கூடக் கிடைக்கவில்லை. எதிர்வரும் 21ஆம் திகதி தொடக்கம் 24ம் திகதி வரையிலான தினங்களில் வெப்பச்சலன செயற்பாட்டால் வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளுக்கு மிதமான மழை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதைவிட மார்ச் 28 முதல் ஏப்ரல் 8 வரை வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளுக்கு சற்று கனமான மழைக்கு வாய்ப்புள்ளது.

கடும் வெப்பநிலை காரணமாக ஏற்படும் கடுமையான ஆவியாக்கம் எமது தரை மேற்பரப்பு மற்றும் தரைக் கீழ் நீர்நிலைகளின் நீரின் அளவை கணிசமான அளவு குறைக்கும்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் தரைக்கீழ் நீரின் அளவு சடுதியாக குறைவடைந்து செல்கின்றது. எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்கு பின்னரே தரைக்கீழ் நீரை மீள் நிரப்பக்கூடிய கன மழைக்கு வாய்ப்புண்டு.

எனவே நிலவுகின்ற வானிலை நிலைமைகளைக் கருத்தில் கொண்டு நீரைச் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். தேவையற்ற நீர் விரயத்தை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என யாழ் பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

 

Share
தொடர்புடையது
25 69316e1e1a0b5
உலகம்செய்திகள்

டொன்பாஸை பலவந்தமாகவேனும் கைப்பற்றுவோம்: உக்ரைனுக்குப் புட்டின் மீண்டும் எச்சரிக்கை!

உக்ரைனுக்குச் சொந்தமான டொன்பாஸ் (Donbas) பிராந்தியத்தை பலவந்தமாகவேனும் கைப்பற்றப் போவதாகவும், அதனால் உக்ரைன் இராணுவம் கிழக்கு...

articles2FclE2t29E6WCHMZuJCogv
இலங்கைசெய்திகள்

அனர்த்த நிவாரண உதவியாக மாலைதீவிலிருந்து 25,000 டின்மீன் பெட்டிகள் நன்கொடை!

இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான வலுவான நட்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பைப் பிரதிபலிக்கும் வகையில், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட...

PMD
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் விசேட உரை: அனர்த்த நிவாரண அறிவிப்பு மற்றும் சொத்து வரி விளக்கம்!

2026ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான குழுநிலை விவாதத்தின்போது, நிதியமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார...

5Vj3jiF6Jb72oIg3IwA0
இலங்கைசெய்திகள்

அனர்த்தப் பாதிப்பு: நாடளாவிய ரீதியில் 504 மருத்துவக் குழுக்கள் சிகிச்சை அளிப்பு!

சமீபத்திய இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக, நாடு முழுவதும் 504 மருத்துவக் குழுக்கள்...