7 10 scaled
சினிமாசெய்திகள்

சுதா கொங்கராவின் ‘புறநானூறு’ படப்பிடிப்பு அறிவிப்பு.. சூர்யா ரசிகர்கள் அதிருப்தி..!

Share

சுதா கொங்கராவின் ‘புறநானூறு’ படப்பிடிப்பு அறிவிப்பு.. சூர்யா ரசிகர்கள் அதிருப்தி..!

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாக இருக்கும் படம் குறித்த அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது என்பதும் ‘புறநானூறு’ என்ற டைட்டில் வைக்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் இந்த படம் குறித்த முக்கிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான ’கங்குவா’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு டப்பிங் பணிகளையும் கிட்டதட்ட முடித்துவிட்டார் என்பதால் இந்த படத்தில் அவரது பணிகள் முற்றிலும் ஆக முடிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘புறநானூறு’ திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் என்று செய்திகள் வெளியான நிலையில் தற்போது இது குறித்த முக்கிய அறிவிப்பை இயக்குனர் சுதா கொங்கரா தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பில், ‘‘புறநானூறு’ படத்திற்கு கூடுதல் கால அவகாசம்  தேவைப்படுவதாகவும் இந்த படத்தில் நாங்கள் இணைந்து பணியாற்றுவது சிறப்பு வாய்ந்தது என்றும் தெரிவித்துள்ளார். இந்த படம் எங்கள் இருவரின் நெஞ்சங்களுக்கு நெருக்கமானது என்றும் சிறந்த படைப்பை உங்களுக்கு வழங்க நாங்கள் பணியாற்றி வருகிறோம் என்றும் விரைவில் அடுத்த கட்ட பணிகள் தொடங்கும் என்றும் உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து ‘‘புறநானூறு’ படத்தின் படப்பிடிப்பு தொடங்க இன்னும் சில காலமாகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் சூர்யா ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும் ‘‘புறநானூறு’ படத்தில் சூர்யாவுடன் துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா உள்ளிட்டோர் நடிக்கின்றனர் என்பதும் ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் என்பதும் இது அவரது நூறாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சுதா கொங்கரா தற்போது ’சூரரை போற்று’ படத்தின் ஹிந்தி பதிப்பை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைய உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...

mcms
உலகம்செய்திகள்

வீரப்பன் தேடுதல் வேட்டை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு ₹ 2.59 கோடி இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப் படையால் (Special Task Force – STF) பாதிக்கப்பட்ட...

21097036 truck
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் கட்டாய ஆங்கிலத் தேர்வில் தோல்வி: 7,000க்கும் மேற்பட்ட பாரவூர்தி சாரதிகள் பணி நீக்கம்!

அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாரவூர்தி சாரதிகளைப் பாதிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்த ஆண்டு...

539661 trisha mks
செய்திகள்இந்தியா

திரிஷா, விஷால், மணிரத்னம் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் – புரளி என உறுதி!

நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களுக்குச் சமூக ஊடகங்கள் மூலம்...