tamilni 359 scaled
இலங்கைசெய்திகள்

மருந்தகங்களுக்கு செல்வதை தவிர்க்கவும்: இலங்கை மக்களுக்கு அறிவுறுத்தல்

Share

மருந்தகங்களுக்கு செல்வதை தவிர்க்கவும்: இலங்கை மக்களுக்கு அறிவுறுத்தல்

இந்த நாட்களில் அதிக வெப்பமான காலநிலை நிலவுவதால் தோல் நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக விசேட தோல் சிகிச்சை வைத்தியர் நிபுணர் இந்திரா கஹ்விட்ட எச்சரித்துள்ளார்.

சூரிய ஒளி நேரடியாக சருமத்தில் படுவதால், சருமத்தில் சில மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்றும், தோல் எரியும் தன்மையை காணப்படலாம் என்றும் கூறியுள்ளார்.

சிறு பிள்ளைகள் உட்பட பாடசாலை மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படும் அபாயம் காணப்படுவதாகவும், இது தொடர்பில் மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக் கொள்வது மிகவும் அவசியமானது எனவும் தோல் சிகிச்சை வைத்திய நிபுணர் இந்திரா கஹ்விட்ட தெரிவித்துள்ளார்.

அதன்படி, தோலில் வெள்ளைப் புள்ளிகள், தோல் அரிப்பு, வியர்வை கொப்புளங்கள், வியர்வை தேங்கி மார்பகங்களில் உருண்டை வடிவ பூஞ்சை போன்றவை இந்த தொற்று நிலைகளாக அடையாளம் காணப்படுகின்றன.

குறிப்பாக பூஞ்சை தொற்று ஏற்பட்டால் மருந்தகத்திற்கு சென்று மருந்துகளை வாங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு பூஞ்சை தொற்றுக்கு சிகிச்சையளித்தால், பூஞ்சை தொற்று சிகிச்சைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் எனவும் சரியான சிகிச்சை பெற முடியாமல் போகலாம் என்றும் எச்சரித்துள்ளார்.

குழந்தைகள் சூரியனுக்கு பழக வேண்டும் என்ற கருத்தை தவிர்த்து இந்த கடினமான சூழலில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
14 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2026 ஜனவரியில் இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 6.8 பில்லியன் டொலராக உயர்வு!

2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான இலங்கையின் பொருளாதார நிலவரம் குறித்த அறிக்கையை இலங்கை மத்திய...

12 3
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் புதிய அரசியலமைப்பு முயற்சி: 30 ஆண்டுகளுக்கும் மேலாக முடிவின்றித் தொடரும் பயணம்!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சி, பல...

11 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மகளின் நினைவாக இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 4.5 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய தந்தை!

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் காணியற்ற ஏழைக் குடும்பங்களுக்காக, தனது 16 வயது மகளின் நினைவாக...

10 4
உலகம்செய்திகள்

ஈரான் மீதான கூட்டுத் தாக்குதல்: பதற்றத்தைக் குறைக்க இந்தியா வலியுறுத்தல்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரானில் உள்ள ராணுவத் தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ள...