Mahinda Ranil 2 1 3 scaled
இலங்கைசெய்திகள்

வடக்கை சேர்ந்த நான்கு அதிகாரிகளுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு

Share

வடக்கை சேர்ந்த நான்கு அதிகாரிகளுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு

வடக்கை சேர்ந்த நான்கு அதிகாரிகளுக்கு இலங்கை நிர்வாக சேவை விசேட தரம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை நிர்வாக சேவை விசேட தர தெரிவுக்கான நேர்முகத் தேர்வு நேற்று(16.03.2024) கொழும்பில் நடைபெற்றுள்ளது.

நாடு முழுவதும் காணப்படும் நிர்வாக சேவை விசேட தரத்திலான 43 வெற்றிடங்களை நிர்ப்பும் நோக்கில் நேர்முகத் தேர்வுக்கு 54 அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 52 பேர் சமூகமளித்துள்ளனர்.

தேர்வுக்கான சிரேஷ்ட நிலைப்பட்டியலில் 43, 44, 45 மற்றும் 47 ஆவது இடங்களிலும் வடக்கைச் சேர்ந்த அதிகாரிகளே இடம்பெற்றிருந்த நிலையில் முதல் 43 இடங்களுக்குள் இருந்த ஓர் அதிகாரி நேர்முகத் தேர்வுக்குச் சமூகமளிக்காத காரணத்தால் 44 ஆவது இடத்தில் இருந்த வடக்கைச் சேர்ந்த அதிகாரி தற்போது 43 ஆவது இடத்தைப் பிடித்துக் கொண்டார். அவருக்கும் விசேட தர நிலை கிடைக்கும் வாய்ப்பு பெரும்பாலும் உறுதியாகியுள்ளது.

இருந்தபோதும் முழுமையான பரிசீலனைகளின் பின்னர் இடையில் உள்ள வேறு யாரும் அதிகாரிகள் சந்தர்ப்பத்தை இழந்தால், 43 இற்கு அடுத்த நிலையிலும் வடக்கைச் சேர்ந்த அதிகாரியே இருக்கின்றார் எனத் தெரிய வந்துள்ளது.

மேலும் தற்போது வரையான முதல் 43 இடங்களுக்குள்ளும் வடக்கைச் சேர்ந்த 4 அதிகாரிகள் இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...