tamilnaadi 141 scaled
இந்தியாசினிமாசெய்திகள்பொழுதுபோக்கு

இயேசு மது குடித்தாரா? நடிகர் விஜய் ஆண்டனியால் சர்ச்சை

Share

இயேசு மது குடித்தாரா? நடிகர் விஜய் ஆண்டனியால் சர்ச்சை

நடிகர் விஜய் ஆண்டனி பத்திரிகையாளர் சந்திப்பில் இயேசு மது அருந்தியதாக குறிப்பிட்டதற்கு கண்டனம் எழுந்துள்ளது.

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ”ரோமியோ” என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று முன் தினம் நடந்தது. அப்போது படத்தின் போஸ்டரில் கதாநாயகி மது அருந்துவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த விஜய் ஆண்டனி, ”குடிப்பது தவறுதான். ஆண், பெண் என யார் குடித்தாலும் தவறுதான். நம் நாட்டில் நீண்ட காலமாகவே குடி உள்ளது. திராட்சை ரசம் என்ற பெயரில் ஜீசஸ் கூட குடித்துள்ளார்” என்றார்.

அவரது இந்தப் பேச்சு இணையத்தில் சர்ச்சையை கிளப்பியது. இந்த நிலையில் தமிழ்நாடு கிருத்தவ சபைகளின் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிருத்தவர்களையும் இயேசு கிறிஸ்துவையும் இழிவுபடுத்தும் விதமாக, எந்த ஆதாரமும் இல்லாமல் திராட்சை ரசத்தை போதை வஸ்துவுடன் ஒப்பிட்டு ”இயேசு மது குடித்தார்” என பொது வெளியில் அவர் பேசியது மனதை புண்படுத்தியதாக கூறப்பட்டுள்ளது.

அத்துடன் விஜய் ஆண்டனி பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இல்லையென்றால் அவரது வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 82
செய்திகள்உலகம்

செல்லப் பிராணிக்காக வேலையைத் துறந்து சட்டம் பயின்ற சீனப் பெண்!

சீனாவின் பீஜிங் நகரைச் சேர்ந்த லீ யிஹான் (Li Yihan) என்ற பெண், விஷம் கலந்த...

Untitled 81
செய்திகள்இலங்கை

எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் நாளை போராட்டம்: பெட்ரோல், டீசல் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு!

பல்வேறு தீர்க்கப்படாத கோரிக்கைகளை முன்வைத்து, நாடு முழுவதுமுள்ள எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் நாளை (ஏப்ரல் 06,...

Untitled 80
உலகம்செய்திகள்

பிடிபட்ட அமெரிக்க விமானி குறித்து ஈரான் நெகிழ்ச்சி அறிக்கை: “கைதி அல்ல, எமது நாட்டின் விருந்தினர்!”

வளைகுடா பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், ஈரானியப் படைகளால் சிறைபிடிக்கப்பட்ட அமெரிக்க விமானி...

Untitled 79
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் அதிரடி: நவீன ஸ்கேனருடன் புதையல் தோண்டிய இரு பெண்கள் உட்பட 11 பேர் கைது!

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திக்கோடை பகுதியில் சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட...