tamilnaadi 140 scaled
உலகம்செய்திகள்

ஒரே நாட்டில் பட்டினியின் விளிம்பில் 5 மில்லியன் மக்கள்

Share

ஒரே நாட்டில் பட்டினியின் விளிம்பில் 5 மில்லியன் மக்கள்

பட்டினியின் விளிம்பில் இருக்கும் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை முன்னெடுக்க அனுமதிக்க வேண்டும் என்று சூடானின் சண்டையிடும் பிரிவுகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஏறக்குறைய ஐந்து மில்லியன் சூடான் மக்கள் வரவிருக்கும் மாதங்களில் ஆபத்தான உணவு பற்றாக்குறையை எதிர்கொள்ள நேரிடும் என்றே ஐ.நா எச்சரித்துள்ளது.

சூடானில் கிட்டத்தட்ட ஓராண்டுகாலமாக போர் நீடித்து வருகிறது. ராணுவ தளபதி Abdel Fattah al-Burhan மற்றும் முன்னாள் தளபதி Mohamed Hamdan Daglo ஆகியோரின் படைகளுக்கு இடையே கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி போர் நீடித்து வருகிறது.

பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதுடன், உள்கட்டமைப்பும் அழிக்கப்பட்டு நாட்டின் பொருளாதாரமும் முடங்கியது. போர் காரணமாக உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதுடன் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு சிக்கலும் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே 18 மில்லியன் சூடான் மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொண்டு வருகின்றனர். கிட்டத்தட்ட 730,000 சூடான் குழந்தைகள், தார்பூரில் மட்டும் 240,000 க்கும் அதிகமானோர் உட்பட கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர்.

ஆனால் சூடான் துறைமுகத்தில் போதுமான உதவி இருப்புக்கள் உள்ளதாகவும், அங்கு இருந்து தேவைப்படும் மக்களுக்கு உதவி எடுத்துச் செல்வதே சிக்கலான விடயம் என்றும் தெரிவிக்கின்றனர்.

தற்போதைய சூழலில் 14 மில்லியன் சிறார்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாகவும், நான்கு மில்லியன் சிறார்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

 

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...