tamilnaadih 3 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை கடற்படையின் கடமை பொதுமக்களை பாதுகாப்பதா..! தமிழர் பகுதி கடத்தலுக்கு உதவுவதா..!

Share

இலங்கை கடற்படையின் கடமை பொதுமக்களை பாதுகாப்பதா..! தமிழர் பகுதி கடத்தலுக்கு உதவுவதா..!

இலங்கை கடற்படையின் கடமை என்பது பொதுமக்களை பாதுகாப்பதா? அல்லது அவர்களின் காணிகளை அபகரிப்பதா? என்று இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் இளைஞரணி யாழ் மாவட்ட செயலாளர் கருணாகரன் குணாளன் கேள்வியெழுப்பியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“யாழ் பொன்னாலையில் ஆயுதம் தரித்த கடற்படையினரின் முன்பாகவே வன்முறைக் கும்பலொன்றினால் தமிழ் இளைஞனொருவர் கடத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளமையானது தமிழர் தாயகத்தில் நிலைகொண்டுள்ள சிறீலங்கா பாதுகாப்பு படைகளின் மீதான சந்தேகத்தினை மென்மேலும் வலுவடையச்செய்துள்ளது .

மேற்படி கடத்தலில் குறித்த முகாமிலுள்ள கடற்படையினருக்கும் தொடர்பிருப்பதாகவே ஊடகங்கள் சந்தேகம் எழுப்பியுள்ள நிலையில் இதேநிலை தென்னிலங்கையில் ஒரு சிங்கள இளைஞனுக்கு நடைபெற்றிருந்தால் அந்த கடற்படை முகாம் தீயிட்டு கொழுத்தப்பட்டிருக்கக்கூடும்.

ஆனால் தமிழர் தாயகத்தில் அவ்வாறு கடற்படை முகாம் மீது கைவைத்தால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிறைக்குள் தள்ளும் ஜனநாயகமே இலங்கையில் காணப்படுகின்றது.

கண்முன்னே ஒரு பொதுமகனை காப்பாற்றமுடியாத லட்சக்கணக்கான சிறீலங்கா பாதுகாப்பு படைகள் தமிழர் தாயகத்தில் ஏன் முகாம்களை அமைத்து பல ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தினை அழிக்கிறார்களென்று பாமரமக்களும் கேள்வியெழுப்புகின்ற சூழ்நிலையினையே பொன்னாலை கடத்தல் சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.

அந்த இளைஞனை கடமையிலிருந்த கடற்படையினரால் வன்முறைக் கும்பலை கட்டுப்படுத்தி காப்பாற்றமுடியாமல் போனதாக கடற்படையின் பேச்சாளர் கயான் விக்ரமசூரிய கூறியிருப்பது வேடிக்கையாக அமைந்திருப்பதாகவே கருதவேண்டியிருக்கின்றது.

ஏனெனில் உலகின் பலம்வாய்ந்த ஆயுதப் போராட்ட இயக்கமாக விளங்கிய விடுதலைப்புலிகளை அழித்ததாக கூறுகின்ற சிறீலங்கா பாதுகாப்பு படையினரால் சாதாரண வன்முறைக்கும்பலிடமிருந்து ஒரு இளைஞனை மீட்கமுடியவில்லையென்று கூறுவது நகைச்சுவையான கேலிக்கூத்து.

இவ்வாறான பயனற்ற கடற்படையினர் தமது தேவைகள் என்ற பெயரில் தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து முகாம்களை அமைக்கின்றார்கள்.

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக விளங்கிய காலப்பகுதியில் யாழ். மாவட்டத்தில் ஆவா என்கிற வன்முறை கும்பலை உருவாக்குவதில் அப்போதைய யாழ். மாவட்ட இராணுவ தளபதி பெரும்பங்கினை வகித்திருந்ததாக கூறப்படுவது உண்மையாகவே இருக்கக்கூடுமென்று எண்ணத் தோன்றுகின்றது.

இதே இலங்கை கடற்படை கடந்த காலங்களில் ஈபிடிபி போன்ற அரச ஒட்டுக்குழுக்கள் மேற்கொண்ட கடத்தல்கள், படுகொலைகளுக்கும் ஆதரவாக செயற்பட்டிருக்ககூடும் என்பதும் நினைவுக்கு வருகின்றது” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...