tamilni 316 scaled
இலங்கைசெய்திகள்

வாகன இறக்குமதி தொடர்பான ஜனாதிபதியின் கருத்து

Share

வாகன இறக்குமதி தொடர்பான ஜனாதிபதியின் கருத்து

தனியார் வாகன இறக்குமதியை மீள ஆரம்பிப்பது தொடர்பான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் திட்டம் வாகன கொள்வனவாளர்களுக்கு சாதகமான செய்தியாக இருக்காது என உள்ளூர் வாகன இறக்குமதியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

அடுத்த வருடம் முதல் தனியார் வாகன இறக்குமதியை படிப்படியாக மீள ஆரம்பிக்க முடியும் என ஜனாதிபதி சூசகமாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையிலேயே, உள்ளூர் வாகன இறக்குமதியாளர்கள் அதற்கு இவ்வாறு மாற்றுக்கருத்தை வெளியிட்டுள்ளனர்.

மேலும், இந்த அறிவிப்பு, தேக்கநிலையில் உள்ள வாகனத்துறைக்கு புதிய உயிர்ப்பை அளிக்கும் அதேவேளை, இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களுக்கான வரி கட்டமைப்புகளில் கணிசமான அதிகரிப்பை ஏற்படுத்தும் என வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், கடந்த ஜனவரியில், அரசாங்கம் வரி கட்டமைப்பை மாற்றியமைத்ததன் விளைவாக வாகன இறக்குமதி செலவுகள் கணிசமாக அதிகரித்துள்ளன என்றும் இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Share
தொடர்புடையது
15 19
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சாம் கரனுக்குப் பதிலாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தசுன் ஷானக்க!

2026-ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே...

14 19
செய்திகள்இந்தியா

புதுச்சேரி தேர்தல்: த.வெ.க வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு? அரசியல் களத்தில் பரபரப்பு!

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க)...

13 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலை உயர்வு: வெதுப்பகப் பொருட்களின் விலை அதிகரிப்பு குறித்து நாளை தீர்மானம்!

இலங்கையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பினால் ஏற்பட்டுள்ள சவால்களைக் கருத்திற்கொண்டு, பாண் உள்ளிட்ட வெதுப்பக...

12 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறி விலைகள் உயர்வு: சில வகைகளுக்கு அதிக கேள்வி!

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (மார்ச் 22, 2026) மரக்கறிகளின் விலைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள்...